ஷாக்!… ஆவின்பால் உற்பத்தி குறைவு!… தட்டுப்பாடு அதிகரிக்கும் அபாயம்!

Avin: தமிழகத்தில் மக்கள் பகல் நேரங்களில் வெளியே வர முடியாத அளவிற்கு வெப்பநிலை உச்சத்தில் உள்ளது. அதிலும் மாலை 6 மணி வரை கூட வெப்பத்தின் அளவு 40 டிகிரி செல்ஸியஸ் என்ற நிலையில் உள்ளது. நாளுக்கு நாள் அதிகரிக்கும் வெப்பத்தின் தாக்கம் காரணமாக தமிழகத்தில் ஆவின் நிறுவனத்தின் தினசரி சராசரி பால் கொள்முதல் அளவு குறைந்துள்ளது. ஆவின் பால் கொள்முதல் தினசரி சராசரி மூன்று லட்சம் லிட்டர் வரை சரிந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது .

பிப்ரவரி மாதத்தில் தினசரி சராசரி 29 லட்சம் லிட்டராக இருந்த பால் கொள்முதல் தற்போது 26 லட்சம் லிட்டராக சரிந்துள்ளது. மேலும் இனிவரும் நாட்களில் வெப்பம் அதிகரிக்க அதிகரிக்க நிலைமை மோசமாகி பால்கோவா ஐஸ்கிரீம் பால் சார்ந்த இனிப்புகள் போன்ற பொருட்களின் உற்பத்தி பாதிக்கப்படலாம் என்று தொழில் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து ஆவின் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: வெப்பத்தின் தாக்கம் காரணமாக கால்நடைகளின் பால் கறக்கும் திறன் குறைந்துள்ளது. தருமபுரி மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்ததால், பால் கொள்முதல் ஓரளவு குறைந்துள்ளது. ஆனால், அட்டைதாரர்கள் மற்றும் சில்லரை நுகர்வோருக்கு பால் விநியோகம் பாதிக்கப்படவில்லை. ஏற்கெனவே சரிவை ஈடுசெய்ய தயாராகிவிட்டோம். எங்களிடம் போதுமான பால் பவுடர் கையிருப்பு உள்ளதாக தெரிவித்தார்.

Readmore: மஞ்சள் அலர்ட்…! அடுத்த 1 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!

Kokila

Next Post

Vote: தேர்தல் அன்று ரயில்வே ஊழியர்களுக்கு விடுமுறை...! நீதிமன்ற பிறப்பித்த அதிரடி உத்தரவு...!

Fri Apr 12 , 2024
2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான நடைமுறைகள் ஏற்கனவே தொடங்கிவிட்டதால், ரயில்வே ஊழியர்களுக்கு தபால் ஓட்டுகள் மூலம் வாக்களிக்க சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை அமர்வு அனுமதி மறுத்துவிட்டது. மதுரையைச் சேர்ந்த மனுதாரர் ராம் குமார் என்பவர், ரயில்வே ஊழியர்கள் பல்வேறு இடங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளதால், வாக்களிக்க முடியவில்லை எனக்கூறி, தபால் ஓட்டுகளை பதிவு செய்ய, தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். தமிழ்நாடு இரயில்வே ஊழியர்கள் எம்.எச்.சி.மெட்ராஸ் […]

You May Like