#Alert: இந்த 9 மாவட்டத்தில் உள்ள மக்களே கவனமாக இருங்க…! கொட்டப் போகும் கனமழை…

தமிழகத்தில் இன்று 9 மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று; தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி, நாமக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

Vignesh

Next Post

454 வாக்குகளுடன் மகளிர் 33% இடஒதுக்கீடு மசோதா மக்களவையில் நிறைவேறியது...!

Thu Sep 21 , 2023
மகளிர் இடஒதுக்கீடு மசோதா மக்களவையில் நிறைவேறியது. ஆதரவாக 454 பேரும் எதிர்ப்பு தெரிவித்து 2 பேரும் வாக்களித்துள்ளனர். திங்களன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பெண்கள் 33 சதவீத இடஒதுக்கீட்டு மசோதா நிறைவேற்ற ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன் பின்னர் மத்திய சட்டத்துறை அமைச்சர் மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். மசோதா மீதான வாக்கெடுப்பு நேற்று நடத்தப்பட்டது. இந்த மகளிர் இடஒதுக்கீடு மசோதா மக்களவையில் நிறைவேறியது. மசோதாவிற்கு ஆதரவாக 454 பேரும் […]

You May Like