சென்னை வி.ஆர். மாலுக்கு வெடிகுண்டு மிரட்டல்..!! பொதுமக்கள் பீதி..!! பெரும் பரபரப்பு..!!

சென்னையில் கடந்த மாதம் 13 தனியார் பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் ஒன்று வந்தது. இதையடுத்து, உடனடியாக காவல்துறை அதிகாரிகள், வெடிகுண்டு நிபுணர்கள், மோப்பநாய் உதவியுடன் அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் சென்று பள்ளி வளாகம், அறைகள் முழுவதும் சோதனை மேற்கொண்டனர்.

அங்கிருந்த பள்ளி மாணவர்களை பத்திரமாக அப்புறப்படுத்தினர். பின்னர், சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்து இ-மெயில் ஐடி குறித்து விவரங்கள் சேகரிக்கும் பணியில், சென்னை போலீசார் தீவிரம் காட்டி வந்தனர். இந்நிலையில், சென்னை கோயம்பேடு மேம்பாலம் அருகே உள்ள தனியார் வணிக வளாகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுவிக்கப்பட்டுள்ளது.

சென்னை திருமங்கலத்தில் உள்ள வி.ஆர்.மாலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வி.ஆர்.மாலில் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து வணிக வளாகத்தில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

Read More : செம குட் நியூஸ்..!! அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி, வீட்டு வாடகைப்படி உயர்வு..!!

Chella

Next Post

விமானத்தில் பெற்றோர் அருகிலேயே குழந்தைக்கும் இருக்கை... சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவு!

Tue Apr 23 , 2024
விமானப் பயணங்களில் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு, அவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் அருகிலேயே இருக்கைகளை ஒதுக்க வேண்டும் என்று சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) இன்று வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவித்துள்ளது. விமான பயனங்களின் போது குழந்தைகளுக்கு பெற்றோர் அருகிலேயே இருக்கைகளை ஒதுக்க வேண்டும் என தொடர்ந்து புகார் தெரிவித்ததை அடுத்து, தனது முந்தைய பரிந்துரைகளில் திருத்தம் செய்து, ஒழுங்குமுறை ஆணையம் புதிய உத்தரவை இன்று வழங்கி உள்ளது. சிவில் […]

You May Like