பிரதமர் மோடியை சந்தித்தார் முதல்வர் விஜய்..! தமிழக நலன் சார்ந்து வைக்கப்பட்ட கோரிக்கைகள் என்னென்ன..?

pm modi cm vijay n

தமிழ்நாடு முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் ஜோசப் விஜய் முதன்முறையாக டெல்லி பயணம் செய்துள்ளார்.. தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து இன்று காலை 10 மணியளவில் புறப்பட்ட முதல்வர் விஜய் இன்று மதியம் டெல்லி சென்றடைந்தார்..


டெல்லி விமான நிலையத்தில் முதல்வர் விஜய்க்கு தவெக தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.. முதற்கட்டமாக தமிழ்நாடு அரசு இல்லத்திற்கு சென்ற முதல்வர் விஜய்க்கு காவல்துறை சார்பில் அரசு மரியாதை வழங்கப்பட்டது.. அந்த மரியாதையை விஜய் ஏற்றுக்கொண்டார்..

இந்த நிலையில் இன்று மாலை 4.30 மணியளவில் பிரதமர் மோடியை விஜய் சந்தித்தார்.. டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள சேவா தீர்த் அலுவலகத்தில் பிரதமர் மோடி – விஜய் சந்திப்பு நடைபெற்றது.. முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் பிரதமர் மோடி உடன் நடைபெற இருக்கும் முதல் சந்திப்பு இதுவாகும்.. அப்போது தேர்தலில் பெற்ற வெற்றிக்காக முதல்வர் விஜய்க்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்..

இந்த சந்திப்பின் போது தமிழகத்தில் பல்வேறு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு, மேகதாது அணை விவகாரம், பி.எம்.ஸ்ரீ திட்டம், வளர்ச்சி திட்ட பணி ஒப்புதல், நிதி உள்ளிட்ட பல்வேறு தேவைகள் குறித்த விரிவான மனுவை முதல்வர் விஜய் பிரதமரிடம் வழங்கினார்.. நீட் தேர்வு ரத்து, தமிழக மீனவர்கள் பிரச்சனை குறித்தும் முதல்வர் விஜய் பிரதமரிடம் கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது.. மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடக அரசுக்கு அனுமதி அளிக்கக்கூடாது என்றும் பிரதமரிடம் விஜய் கோரிக்கை வைத்துள்ளார்.. பிரதமர் மோடி – முதல்வர் விஜய் சந்திப்பு சுமார் 20 நிமிடங்கள் நீடித்தது..

இதை தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நிர்மலா சீதாரமன் ஆகியோரையும் முதலமைச்சர் விஜய் சந்திக்க உள்ளார்..

இன்றிரவு டெல்லியில் தங்கும் முதல்வர் விஜய் நாளை காலை காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் மற்றும் பிரியங்கா ஆகியோரை சந்திக்க உள்ளார்.. அதன்பின்னர் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களையும் விஜய் சந்திக்க திட்டமிட்டுள்ளார்.. இந்த சந்திப்பு முடிந்ததும் நாளை முதல்வர் விஜய் சென்னை திரும்ப உள்ளதாக கூறப்படுகிறது..

Read More : கர்நாடக அரசியலில் அதிரடி திருப்பம்..!முதல்வர் சித்தராமையா நாளை ராஜினாமா..?

English Summary

Chief Minister Vijay, who is currently in Delhi on an official visit, met with Prime Minister Modi around 4:30 PM this evening.

RUPA

Next Post

அதிமுகவில் அடுத்த பூகம்பம்..!எஸ்.பி.வேலுமணி நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி.. செய்தியாளர்களிடம் ஆவேசமான சி.வி. சண்முகம்..!

Wed May 27 , 2026
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் அதிமுகவில் கடும் உட்கட்சி மோதல் வெடித்துள்ளது.. முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம், சி. விஜயபாஸ்கர் தலைமையிலான அணி, கட்சியின் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி என அதிமுக இரண்டாக பிளவுப்பட்டது.. அதிமுக கொறடாவின் உத்தரவை மீறி எஸ்.பி.வேலுமணி அணி தவெகவுக்கு ஆதரவு அளித்ததால் அதிமுகவில் பெரும் பூகம்படம் வெடித்தது.. இதனால் எடப்பாடி பழனிசாமி தரப்பு 22 […]
eps shanmugam

You May Like