மீன் தொட்டியில் தவறிவிழுந்து குழந்தை பலி…

சென்னையில் மீன் தொட்டியில் தவறி விழுந்து ஒன்றரை வயது குழந்தை மீன் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அம்பத்தூர் வெங்கடபுரம் வன்னியர் தெருவை சேர்ந்த யுவராஜ், பிளம்பர் வேலை பார்த்து வருகின்றார். அவருடைய மனைவி கவுசல்யா வீட்டில் குழந்தையை பார்த்துக் கொண்டு வருகின்றார். வழக்கம் போல் யுவராஜ் மனைவியிடம் குழந்தையை பத்திரமாக பார்த்துக் கொள்ளுமாறு சொல்லிவிட்டு வேலைக்கு சென்றுவிட்டார். ஆனால், கவுசல்யா வீட்டு வேலைகளை கவனித்துக் கொண்டிருந்தார்.


அவர்களுடைய ஒன்றரை வயது பெண் குழந்தை மீனாட்சி வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்குள் வைத்திருந்த மீன் தொட்டியில் விளையாட்டு பொம்மை விழுந்தது. விளையாட்டு பொருளை எடுக்க குழந்தை மீனாட்சி முயற்சி செய்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கவிழ்ந்து உள்ளே விழுந்துவிட்டாள். இதனை கவுசல்யா கவனிக்கவில்லை.

பத்து நிமிடம் கழித்து வந்து பார்த்தபோது குழந்தை தலைகீழாக மீன் தொட்டியில் கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்து தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

Next Post

அசத்தல்...! தமிழக அரசு சார்பில் கான்கிரீட் வீடு கட்ட ரூ.95,000 வழங்கப்படும்...! அமைச்சர் அறிவிப்பு...!

Tue Nov 15 , 2022
வட கிழக்கு பருவ மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை பேசிய அமைச்சர் KKSSR ராமச்சந்திரன் வடகிழக்குப் பருமவழை குறைந்துள்ளது. மூன்று நாளைக்குப் பிறகு மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழை பாதிப்பால் மனித உயிரிழப்புக்கு 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும். இதேபோல் கால்நடை உயிரிழப்பில், பசு, எருமை ஒன்றிற்கு ரூ. 30,000, செம்மறி ஆடு, ஆடு, பன்றி […]
Goverment house tn

You May Like