ஆசை வார்த்தை கூறி சிறுமியை கடத்திச் சென்று உல்லாசம் அனுபவித்த வாலிபர்…..! போக்சோவில் தட்டி தூக்கிய காவல்துறை…..!

சென்னை அம்பத்தூர் அடுத்துள்ள கொரட்டூர் பகுதியை சேர்ந்த 16 வயது பள்ளி மாணவி ஒருவர் திடீரென்று காணாமல் போனார். அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் அதிர்ச்சிக்கு உள்ளான பெற்றோர் கொரட்டூர் காவல் நிலையத்தில் புகார் வழங்கினார். இந்த புகார் கடந்த 18ஆம் தேதி வழங்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர தேடுதல் வேட்டையை நடத்தி வந்தார்கள்.


இந்த சூழ்நிலையில் தான் அந்த சிறுமி ஆந்திர மாநிலம் தடாவில் இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு சென்ற காவல்துறையினர் அந்த சிறுமியையும் அந்த சிறுமியுடன் இருந்த வாலிபர் ஒருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

அதன் பிறகு அந்த சிறுமியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி தன்னை ஆந்திர மாநிலம் தடாவிற்கு அழைத்துச் சென்று அறை எடுத்து அந்த வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்ததாக சிறுமி தெரிவித்தார்.

ஆகவே வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த விமல்ராஜ் (22) என்ற வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். மேலும் அவரை அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய காவல்துறையினர் அதன் பிறகு புழல் சிறையில் அடைத்திருக்கிறார்கள்.

Next Post

ராமஜெயம் கொலை வழக்கில் ஏற்பட்ட திடீர் திருப்பம்…..! சிக்குவாரா. அதிமுகவின் முன்னாள் எம்எல்ஏ…..?

Sat Mar 25 , 2023
கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29ஆம் தேதி தமிழகமே பரபரப்பாக பேசிக்கொண்ட ஒரு நிகழ்வு தற்போதைய அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் கொலை சம்பவம். அன்று தன்னுடைய வீட்டில் இருந்து நடை பயிற்சிக்கு சென்ற அவர் மர்ம நபர்களால் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு காவிரி ஆற்றின் கரையில் இருந்து அவருடைய சடலம் கண்டெடுக்கப்பட்டது. அப்போது இவருடைய கொலை சம்பவம் தமிழ்நாடு முழுவதும் […]
kn ramajayam

You May Like