தென்காசி மாவட்டம் ஊர்மேழலகியான் கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கம் (25) இவர் கூலி தொழில் செய்து வருகிறார். இத்தகைய நிலையில், அதே ஊரை சேர்ந்த ஒரு 10 வயது சிறுமி கடைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த மாணிக்கம் கட்டாயப்படுத்தி தன்னுடைய பைக்கில் ஏற்றுக்கொண்டு ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு வைத்து அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
அத்துடன் இந்த சம்பவம் குறித்து யாரிடமாவது சொன்னால் உன்னை கொலை செய்து விடுவேன் என்று மாணிக்கம் அந்த சிறுமியை மிரட்டி சென்றுள்ளார். ஆகவே தனக்கு நடந்த இந்த கொடூர சம்பவத்தை தன்னுடைய பெற்றோர்களிடம் தெரிவித்து கதறி அழுதுள்ளார் அந்த சிறுமி.
இதை கேட்டு அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்கள், தென்காசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் வழங்கினர். இதற்கு நடுவில் தன்னை காவல் துறையினர் தேடி வருகிறார்கள் என்பதை அறிந்து கொண்ட மாணிக்கம் தலைமறைவானார்.
உடனே மாணிக்கத்தை கைது செய்து அவர், மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்து அந்த சிறுமியின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் குதித்தனர். சார்பாக கேள்விப்பட்டு தென்காசி டிஎஸ்பி நாகசங்கர் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, அவர்கள் கலைந்து சென்றனர். இதற்கு நடுவே இளைஞர் மாணிக்கத்தின் மீது காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வந்த நிலையில், புளியங்குடி காட்டுப்பகுதியில் பதுங்கி இருந்த அவரை கைது செய்து இருக்கிறார்கள்.