fbpx

’இந்த ஃபோட்டோவ பார்த்துட்டு எவனோ ட்ரோல் பண்றான்னு இருந்தேன்’..!! ரஜினியை வச்சு செய்த ப்ளூ சட்டை மாறன்..!!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ’லால் சலாம்’ படத்தில் சூப்பர் ஸ்டார் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இரண்டு தினங்களுக்கு முன்பாக இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில், அதை பார்த்த ரசிகர்கள் இணையத்தில் கலவையான விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர். இவருடைய கதாபாத்திரம் எந்த மாதிரியானதாக இருக்கும் என்று உற்சாகமாக எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இந்த போஸ்டர் மிகவும் ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது. அந்த போஸ்டரில் ரஜினியின் கெட்டப்பை பார்த்த நெட்டிசன்கள் சரமாரியாக பங்கம் செய்து வருகின்றனர். அதிலும் இது என்ன பிரியாணி கடைக்கு விளம்பரமா செய்றாங்க. அதுக்காக ரெடி பண்ண போஸ்டர் போட்ட மாதிரி இருக்கு என்று கலாய்த்து வருகின்றனர்.

அத்துடன் ப்ளூ சட்டை மாறன் இந்த போஸ்டரை பார்த்து ”ஏன்டா இது ஒரிஜினல் போஸ்டர்ன்னு சொல்ல மாட்டீங்களா. ரெண்டு நாளா இது எவனோ ட்ரோல் பண்றதுக்கு போட்டது என்று நினைத்து போயிட்டே இருக்கேன். போஸ்டர் கூட தலைவர் தேற மாட்டார் போல இவனுங்க எதை நம்பி படத்தை எடுக்குறாங்க தெரியவில்லையே” என்று தாறுமாறாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அத்துடன் இவருடைய ரசிகர்களும் இதுவரை என் தலைவர் சேர்த்து வச்ச மொத்த இமேஜையும் டேமேஜ் பண்ற மாதிரி அவருடைய மகள் இப்படி தேரில் இழுத்து தெருவில் விட்ட கதையாக என் தலைவரை அசிங்கப்படுத்தி விட்டாங்களே என்று ஆதங்கத்தில் கொந்தளித்து வருகின்றனர்.

இது என்ன என் தலைவருக்கு வந்த சோதனை இதெல்லாம் பார்க்கணும்னு தலையெழுத்தா அதிலும் அவருடைய போஸ்டரை பார்க்கும்போது பிட்டு பிட்டா அங்கங்க எடிட்டிங் பண்ணி இருக்கீங்களே. எப்படி இருந்த என் தலைவர் இப்படி ஆயிட்டாரே என்று சொல்வதற்கு ஏற்ப அவருடைய போஸ்டர் இருக்கிறது. அதிலும் சும்மா மெல்லுகிற வாய்க்கு அவள் கிடைத்தது போல ஏற்கனவே இவரை கமல் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். அதிலும் இந்த போஸ்டரில் ரஜினி வாயை பார்த்து கோண வாய குமரேசா என்றெல்லாம் நக்கல் அடித்து வருகின்றனர். ரஜினியை வச்சு நல்லா செஞ்சுட்டாங்க அவருடைய பொண்ணு. ஒருவேளை ஐஸ்வர்யாவிடம் இருக்கும் இந்த டேலண்ட் பார்த்து பயந்து தான் தனுஷ் தள்ளி வந்துட்டாரு போல.

Chella

Next Post

தொடர்ந்து செக்ஸ் டார்ச்சர்….! வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கணவர் மீது புகார் வழங்கிய இளம் பெண்….!

Tue May 9 , 2023
உத்திர பிரதேச மாநிலம் குவாலியரில் 24 வயது இளம்பெண் ஒருவருக்கு ஒரு இளைஞருடன் திருமணம் நடைபெற்று உள்ளது. அந்த திருமணத்தின் போது வரதட்சணையாக பெண் வீட்டார் தரப்பில் கொடுத்திருக்கிறார்கள் ஆனாலும் கூடுதலாக 10 லட்சம் ரூபாய் மற்றும் ஒரு கார் வேண்டும் என்று கணவரும், மாமியாரும் கேட்க தொடங்கியதால் பிரச்சனை ஆரம்பித்தது. இந்த நிலையில் கணவர் தன்னிடம் வரதட்சணை கேட்டு தொடர்ந்து கொடுமைப்படுத்தியதன் காரணமாக, அந்த இளம் பெண் காவல் […]
’ஞாயிற்றுக்கிழமை உங்க விருப்பம்தான்’..!! ஏமாற்றி திருமணம் செய்த நபருக்கு இப்படி ஒரு தீர்ப்பா..?

You May Like