பள்ளி முதல்வரை 27 முறை குத்திக் கொலை செய்த 10ம் வகுப்பு மாணவர்கள்!. வெளியான பகீர் காரணம்!. தெலுங்கானாவில் கொடூரம்!.

Telangana murder 30kb

தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில், பள்ளி முதல்வர் கல்லு ரூபா ரெட்டி என்பவர், அதே பள்ளியில் பயிலும் இரண்டு 10-ஆம் வகுப்பு மாணவர்களால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். கொந்தமல்லிப்பள்ளி பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் நடந்த இக்கொலை வழக்கில், தலைமறைவாக இருந்த சிறுவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.


மாணவர்கள் இருவரின் ஆடம்பரச் செலவுப் பழக்கம் மற்றும் அவர்களின் அறையில் கண்டுபிடிக்கப்பட்ட பணம் குறித்து முதல்வர் ரூபா ரெட்டி கண்டித்துள்ளார். மேலும், இதுகுறித்து அவர்களின் பெற்றோரிடம் புகார் தெரிவிக்கப் போவதாகவும் எச்சரித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் அவரைத் தீர்த்துக்கட்டத் திட்டமிட்டுள்ளனர்.

மரணமடைவதற்கு முன்பு தனது அத்தையுடன் பேசிய ரூபா ரெட்டியின் கடைசி வார்த்தை “பாபு” என்பதாகும். அப்பள்ளியில் மாணவர்களை “பாபு” என்று அழைப்பது வழக்கம் என்பதால், விசாரணையை மாணவர்களை நோக்கித் திருப்பியது காவல்துறை.

ஒரே விடுதி அறையில் தங்கியிருந்த அந்த மாணவர்கள், விலையுயர்ந்த செல்போன்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டுள்ளனர். விரைவாகப் பணம் சம்பாதிப்பது எப்படி என்று யூடியூப் மற்றும் சமூக வலைதளங்களில் தேடியுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கொலை செய்வதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே முதல்வரின் வீட்டை மாணவர்கள் உளவு பார்த்துள்ளனர். வீட்டின் முன்பகுதியில் சிசிடிவி கேமரா இருந்ததால், பின்பகுதி வழியாக உள்ளே நுழைந்துள்ளனர். முதல்வர் தங்களை அடையாளம் கண்டுகொண்டதால், கத்தியால் அவரை 27 முறை குத்திக் கொன்றுவிட்டு, அங்கிருந்த பணம் மற்றும் அவரது செல்போனுடன் தப்பியோடியுள்ளனர்.

நல்கொண்டா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார், 30 கிலோமீட்டர் சுற்றளவில் இருந்த 70-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து குற்றவாளிகளைக் கண்டறிந்தனர். டோனியலா எக்ஸ்-ரோடு அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் மோட்டார் சைக்கிளில் சென்ற மாணவர்களை மறித்து விசாரித்தபோது உண்மை வெளிவந்தது.

அவர்களிடம் இருந்து ரூ. 1.54 லட்சம் ரொக்கம், அதில் சில நோட்டுகளில் ரத்தக்கறைகள் இருந்தன, பாதிக்கப்பட்டவரின் செல்போன், கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட கத்தி, முகமூடிகள் மற்றும் 60,000 ரூபாய் மதிப்பிலான புதிய ஐபோன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. பள்ளியில் நல்வழிப்படுத்த முயன்ற ஆசிரியையே மாணவர்கள் கொடூரமாகக் கொலை செய்துள்ள இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

1newsnationuser5

Next Post

பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை… கர்ப்பத்தை மறைத்து குழந்தையையும் விற்ற கொடூரம்!

Thu Aug 20 , 2026
ராய்பூரில் 16 வயது மகளை தந்தையே பாலியல் வன்கொடுமை செய்ததுடன், அவரது கர்ப்பத்தை மறைத்து குழந்தையையும் விற்பனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் தந்தை, அத்தை உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்பூரில் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் கடந்த 2023-ஆம் ஆண்டு கணவரை பிரிந்து சென்றுள்ளார். அதன் பின்னர் மூன்று மகள்களும் தந்தையின் பராமரிப்பில் இருந்த […]
Rape 2025 6

You May Like