இன்று மாலை 16 கி.மீ “ரோடு ஷோ” செல்லும் CM ஸ்டாலின்..! பாதுகாப்பு பணியில் 2000 போலீசார்…!

MK Stalin dmk 1

மதுரையில் நாளை திமுக பொதுக் குழுவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார். இன்று மாலை ரோடு ஷோ’ செல்கிறார். இதையொட்டி, 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


திமுக மாநிலப் பொதுக் குழுக் கூட்டம் மதுரை உத்தங்குடியில் நாளை (ஜூன் 1) நடைபெறுகிறது. இதற்காக பிரம்மாண்ட அரங்கம் உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முன்னதாக, இன்று மாலை ரோடு ஷோ நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக விமானம் மூலம் முதல்வர் ஸ்டாலின் மதியம் 12 மணியளவில் மதுரை வருகிறார். விமான நிலையத்தில் முதல்வருக்கு அமைச்சர்கள் பி.மூர்த்தி தலைமையில், மாவட்டச் செயலாளர்கள் கோ.தளபதி, எம்.மணிமாறன் உள்ளிட்டோர் வரவேற்பு அளிக்கின்றனர்.

முதல்வர் ஸ்டாலின், மாலை 5 மணியளவில் பெருங்குடி முதல் ஆரப்பாளையம் வரை 16.5 கிலோமீட்டர் தொலைவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ரோடு ஷோவில் பங்கேற்கிறார். பெருங்குடி, வில்லாபுரம், சோலையழகுபுரம், ஜீவாநகர், டிவிஎஸ் பாலம், பழங்காநத்தம் ரவுண்டானா, பைபாஸ் ரோடு, காளவாசல், குரு தியேட்டர், திண்டுக்கல் ரோடு சந்திப்பு, ஆரப்பாளையம் வரை சாலையோரம் திரண்டிருக்கும் பொதுமக்கள், கட்சியினரை திறந்த வேனில் நின்றபடி முதல்வர் சந்திக்கிறார்.

இதையொட்டி, மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில் 2 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர். வில்லாபுரம், ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் முதல்வர் வேனை விட்டு இறங்கி, சாலையில் நடந்து சென்று மக்களை சந்திக்கிறார். மேலும், பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரோடு ஷோவுக்குப் பிறகு மதுரா கோட்ஸ் பாலம் அருகே புதிப்பிக்கப்பட்ட முன்னாள் மேயர் முத்துவின் சிலையை முதல்வர் திறந்து வைக்கிறார். நாளை காலை 9 மணிக்கு உத்தங்குடியில் நடைபெறும் திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் முதல்வர் பங்கேற்கிறார்.

Read More: ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர்களுக்கு இனி அகவிலைப்படி உயர்வு கிடையாது..!! விதிகளில் மாற்றம்..

Vignesh

Next Post

'அச்சுறுத்தலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது'!. வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அதிரடி!

Sat May 31 , 2025
உலகின் பிற நாடுகளுடனும் இந்தியா ஒற்றுமையை அதிகரிக்க விரும்புவதாகவும், நம்பிக்கையின் அடிப்படையில் கூட்டாண்மைகளை உருவாக்குவதில் இந்தியா நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார். குஜராத்தின் வதோதராவில் உள்ள பருல் பல்கலைக்கழகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (மே 30, 2025) வெளிநாட்டு மாணவர்களின் பட்டமளிப்பு விழாவில் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கலந்து கொண்டார். அப்போது மாணவர்களிடையே உரையாற்றிய அவர், சர்வதேச ஒத்துழைப்பு, தன்னிறைவு இந்தியா மற்றும் வசுதைவ குடும்பகரம் ஆகியவற்றின் […]
jaishankar 1

You May Like