மேற்குவங்க மாநில பகுதியில் முன்னாள் கடற்படை வீரரான உஜ்வால் என்பவர் தன்னுடைய மகன் மற்றும் மனைவியினை தொடர்ந்து அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். மகன் பாலிடெக்னிக் படித்து வருகிறார்.
இந்த நிலையில் சம்பவம் நடைபெற்ற அன்று தேர்வுக்காக தனது அப்பாவிடம் பணம் கேட்டிருக்கிறார். அந்த பணத்தினை தந்தை தர மறுத்ததால் அதே சக்கர போர்த்தி அவரது மகன் தள்ளி விட்டுள்ளார். திடீரென எதிர்பாரத விதமாக அருகில் உள்ள நாற்காலியில் விழுந்து பலத்த காயம் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து தந்தையின் கழுத்தை நெறித்து மகன் கொடூரமாக கொலை செய்துள்ளார். மேலும், கொலை செய்யப்பட்ட தந்தையின் உடலை கழிப்பறையில் வைத்து கொடூரமாக ஆறு துண்டுகளாக வெட்டியுள்ளார்.
இதன் பின்னர் வெட்டிய தந்தையின் உடல் பாகங்களை பிளாஸ்டிக் பையில் போட்டு பல்வேறு இடங்களில் புதைத்துள்ளார். அத்துடன் கொலைக்கு அவரது தாயாரும் உடந்தையாக இருந்துள்ளார் எனவும் தெறிய வந்துள்ளது.
இதனையடுத்து தந்தையை காணவில்லை என மகன் போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் இவையனைத்தும் தெரியவந்துள்ளது. மேலும், மனைவி மற்றும் மகனை கைது செய்துள்ளனர்.