கர்நாடக மாநில பகுதியில் உள்ள பெங்களூரு சண்போகநஹள்ளியில் வசிக்கும் ராஷி(19) என்பவர் அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் சம்பவம் நடைபெற்ற அன்று வழக்கம் போல் வீட்டிலிருந்து கல்லூரிக்கு சென்றுள்ளார். பிறகு, கல்லூரி முடிந்த நிலையில் வீடு திரும்பியுள்ளார்.
அந்த சமயத்தில், யாரும் இல்லாத நேரம் பார்த்து ரோட்டில் நடந்து வந்த ராஷியை அங்கே பின்தொடர்ந்து வந்த இரண்டு இளைஞர்கள் வழிமறித்து அவரை சரமாரியாக வெட்டி உள்ளனர். இதனால் இளம் பெண் ராஷி ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.
இது குறித்து அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளிக்கவே விரைந்து வந்த காவல்துறையினர் இளம்பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அத்துடன், இந்த கொலையானது காதல் விவகாரத்தால் நடந்ததா அல்லது வேறு ஏதும் காரணமா என்ற கோணத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.