உயர்க்கல்வி தொடர்பான வழிகாட்டுதல்கள் தேவைப்படும் மாணவர்களுக்கு கட்டுப்பாட்டு அறை…!

College students 2025

சேலம் மாவட்டத்தில் உயர்க்கல்வி தொடர்பான வழிகாட்டுதல்கள் தேவைப்படும் மாணவர்களுக்காக மாவட்ட அளவில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு அரசால் உயர்க்கல்வி வழிகாட்டுதல் செயல்திட்டம் கடந்த 2022-23-ஆம் கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டு 12-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்கள் உயர் கல்வியில் 2022-23-ஆம் கல்வியாண்டில் 69% மாணாக்கர்களும், 2023-24-ஆம் கல்வியாண்டில் 74% மாணாக்கர்வகளும் உயர்க்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை மேற்கொண்டு உயர்க் கல்வி பயின்று வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக 2024 25.ஆம் கல்வியாண்டில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு நிறைவு செய்த மாணவர்கள் அனைவரும் 100% உயர்க் கல்வி சேர்க்கை மேற்கொள்ள இலக்கினை அடைவதற்கு மாவட்ட அளவில் கட்டுப்பாட்டு அறை உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இக்கட்டுப்பாட்டு அறையின் மூலம் ஆதரவற்ற மாணவர்கள், தாய் அல்லது தந்தை இழந்த மாணவர்கள், மாற்றுத் திறன்கொண்ட மாணவர்கள், அகதிகள், கல்லூரி கட்டணம் செலுத்த இயலாதவர்கள், மேல்நிலை வகுப்புகளில் தேர்ச்சி பெறாதவர்கள், உயர்க்கல்வி சார்பான வழிகாட்டுதல்கள் தேவைப்படும் மாணவர்கள், சான்றிதழ்கள் தேவைப்படும் மாணவர்கள் மற்றும் பிற காரணங்களால் உயர் கல்வி பெற முடியாத மாணவர்களுக்கு ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு வருகிறது.

சேலம் மாவட்ட ஆட்சியரக முதல் தளத்தில் அறை எண்.101 இல் செயல்பட்டு வரும் மாவட்ட கட்டுப்பாட்டு அறையினை 97888 58931, 99420 31640 என்ற எண்களில் தொடர்பு கொண்டு, உயர்க்கல்வி சேர்க்கை தொடர்பாக சந்தேகங்கள், வழிகாட்டுதல்கள் தேவைப்படும் மாணவர்கள் மாவட்ட கட்டுப்பாட்டு அறையினைத் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more: மனிதர்களே கிடையாது.. பஸ் ஸ்டாப் முதல் டீ கடை வரை மனித பொம்மைகள் வாழும் அதிசய கிராமம்..!!

Vignesh

Next Post

"பயங்கரவாதம் மனிதகுலத்தின் எதிரி; போா்க் களத்தில் பிரச்னைகளுக்கு தீா்வு என்பதே இல்லை"!. பிரதமர் மோடி!.

Thu Jun 19 , 2025
பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை (ஜூன் 18, 2025) கனடாவிலிருந்து குரோஷியாவை சென்றடைந்தார். குரோஷிய பிரதமர் ஆண்ட்ரேஜ் பிளென்கோவிச்சுடனான சந்திப்பின்போது, ரஷ்யா-உக்ரைன் மோதல் மற்றும் இஸ்ரேல்-ஈரான் நிலைமை குறித்து விவாதிக்கப்பட்டது. ஐரோப்பாவாக இருந்தாலும் சரி, ஆசியாவாக இருந்தாலும் சரி, எந்தவொரு பிரச்சினைக்கும் போர்க்களத்திலிருந்து தீர்வு வர முடியாது என்று பிரதமர் மோடி கூறினார். உலகின் எந்தவொரு நாட்டிற்கும் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்கு மரியாதை அவசியம் என்று அவர் கூறினார். […]
pm modi croatia visit 11zon

You May Like