வாடகை தாய் முறையில் குழந்தை பெறும் தீபிகா படுகோன்..!! வைரலாகும் அதிர்ச்சி புகைப்படம்..!!

சமீபத்தில் வெளியான நடிகை தீபிகாவின் புகைப்படம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

பாலிவுட் நட்சத்திர ஜோடி தீபிகா – ரன்வீர் திருமணம் முடிந்து 5 ஆண்டுகளுக்கும் மேல் ஆகும் நிலையில், ’குழந்தை எப்போது?’ என்ற செய்தி இவர்களையும் துரத்த ஆரம்பித்தது. கடந்த 2018ஆம் ஆண்டு இந்த ஜோடி இத்தாலியில் கோலாகலமாகத் திருமணத்தை முடித்தது. திருமணம் முடிந்தாலும் இருவரும் தங்களது கரியரிலும் பிஸியாக இருந்தனர். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார் தீபிகா.

இருவரும் குழந்தையை இந்த வருடம் செப்டம்பர் மாதம் எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளார். கர்ப்பத்தை அறிவித்ததில் இருந்து பொதுவெளியில் தளர்வான ஆடைகளையே அணிந்து வருகிறார் தீபிகா. குறிப்பாக, ஆனந்த் அம்பானி வீட்டுத் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்ட நிகழ்வில் கலந்து கொண்டபோது கூட, வயிற்றை மறைக்கும்படியான உடைகளையே அணிந்திருந்தார். இப்படி இருக்கையில், ரோஹித் ஷெட்டி நடிப்பில் உருவாகி வரும் ‘சிங்கம் அகெய்ன்’ படப்பிடிப்பில் தீபிகா கலந்து கொண்டுள்ளார்.

இதன் படப்பிடிப்புத் தளத்தில் இருந்து புகைப்படங்கள் வெளியாகி இருந்தது. இதில் தீபிகாவின் வயிற்றைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தீபிகாவுக்கு 5-வது மாதம் நடக்கும் நிலையில் அவரது ‘பேபி பம்ப்’ தெரியவில்லை என்பதுதான் ரசிகர்களின் ஆதங்கம். புகைப்படத்தைப் பார்த்த இன்னும் சிலர், ‘தீபிகா வாடகைத் தாய் மூலம் குழந்தைப் பெறுகிறார். இந்த உண்மையை மறைக்கிறார்’ எனவும் சர்ச்சைக் கிளப்பி வருகின்றனர்.

Read More : ‘நீயா நானா நிகழ்ச்சியில் நடக்கும் உண்மை சம்பவம்..!! இதுதான் அங்கு நடக்கிறது..!! புட்டு வைத்த பிரபலம்..!!

Chella

Next Post

’உன்ன நம்பி தானடா வந்தேன்’..!! ’3 பேரும் சேர்ந்து அந்த இடத்துல’..!! காதலனால் கதறிய சிறுமி..!!

Thu Apr 18 , 2024
திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை எம்.ஜி.ஆர். நகர் பகுதியைச் சேர்ந்த 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவி பள்ளிக்கு சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இதையடுத்து, வேறு வழியில்லாமல் எம்.ஜி.ஆர். நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து […]

You May Like