Ration Card | ரேஷன் கார்டில் பெயர் நீக்கமா.? உணவு வழங்கள் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.!

Ration Card: பிரதான் மந்திரி கரீப் கல்யாண் திட்டத்தின் கீழ் புலம்பெயர்ந்தோர் மற்றும் ஏழை மக்களுக்கு ரேஷன் கடை மூலமாக இலவசமாக உணவு தானியங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் பல கட்டங்களாக ஏழைகளுக்கு உணவு தானியங்கள் அரிசி போன்றவை வழங்கப்படுகிறது

இந்தத் திட்டத்தின் மூலமாக ஏராளமான ஏழை மக்கள் பயனடைந்தனர். எனினும் இந்தத் திட்டத்தில் பலர் தவறுதலாக இணைக்கப்பட்டுள்ளதாகவும் சர்ச்சை எழுந்தது. இதனைத் தொடர்ந்து பிரதான் மந்திரி கரீப் கல்யாண் திட்டத்திற்கு தகுதியற்றவர்கள் எனக் கூறி பலரது பெயர்களையும் மத்திய அரசு ரேஷன் கார்டில் இருந்து நீக்கியது.

இதனால் பல மக்களுக்கும் ரேஷன்(Ration Card) பொருட்கள் கிடைக்கவில்லை. இதன் காரணமாக பல புகார்கள் இருந்ததை தொடர்ந்து நீக்கப்பட்ட பெயர்களை மீண்டும் சேர்க்க மத்திய அரசு உத்தரவிட்டது. அதன்படி உணவு வழங்கள் துறை அலுவலகத்திற்கு தகுந்த ஆவணங்களுடன் சென்று நீக்கப்பட்ட பெயர்களை சேர்த்துக் கொள்ளுமாறு மத்திய அரசு அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

Read More: அதிமுக டிடிவி வசம் வந்துவிடும் என அண்ணாமலை கூறுவற்கு அவர் என்ன ஜோசியரா..? செல்லூர் ராஜூ கேள்வி..!

Next Post

MSC ARIES: உச்சகட்ட பதற்றம்.!! 17 இந்தியர்களுடன் சிறை பிடிக்கப்பட்ட இஸ்ரேல் கப்பல்.!! ஈரானுடன் மத்திய அரசு தீவிர பேச்சுவார்த்தை.!!

Sat Apr 13 , 2024
போர்ச்சுக்கல் மற்றும் இஸ்ரேலுடன் இணைந்த எம்எஸ்சி ஏரீஸ் என்ற சரக்கு கப்பலை ஹார்முஸ் வளைகுடா பகுதியில் ஈரான் சிறை பிடித்து இருக்கிறது. இந்தக் கப்பலில் பணியாற்றிய 25 நபர்களும் சிறைபிடிக்கப்பட்ட நிலையில் அவர்களில் 17 பேர் இந்தியர்கள் என்ற தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் இந்தக் கப்பலில் சிறைபிடிக்கப்பட்டவர்களில் பிலிப்பைன்ஸ் பாகிஸ்தான் மற்றும் எஸ்டோனியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களும் அடங்குவார்கள் என்று தகவல் தெரிவிக்கிறது. இந்தக் கப்பல் […]

You May Like