இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 263 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனைத் தொடர்ந்து இந்திய அணி பேட்டிங் செய்து வருகின்றது.
ஆஸ்திரேலிய அணியின் அபாரமான பந்துவீச்சில் இந்திய அணி அடுத்தடுத்து தன்னுடைய விக்கட்டுகளை இழந்து பரிதவித்து வருகிறது குறிப்பாக சுழற் பந்துவீச்சாளர் நேதன் லயன் மிகவும் சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ரோஹித் சர்மா(32),லோகேஷ் ராகுல் (17), புஜரா (0) ,ஸ்ரேயாஸ் ஐயர் (4) உள்ளிட்டோரை லைன் தன்னுடைய சுழற் பந்துவீச்சில் ஆட்டமிழக்க வைத்தார்.
விராட் கோலியும், ஜடேஜாவும் களத்தில் இருக்கிறார்கள். இந்திய அணி 175 ரன்கள் பின்தங்கிய நிலையில் வருகிறார் முன்னதாக முதலில் நடந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.