தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே அமைந்துள்ளது புகழ்பெற்ற கழுகுமலை அகிலாண்டேஸ்வரி சமய ஜம்புநாதீஸ்வரர் கோயில். மற்ற கோயில்களிலிருந்து மாறுபட்ட அமைப்புடன் விளங்கும் இந்த ஆலயம், அதன் ‘வைரத் தேர்’ காரணமாக பெரும் புகழ் பெற்றுள்ளது. இலுப்பை மரத்தால் செய்யப்பட்டு, வைரம் பாய்ந்த பலகைகளால் அமைக்கப்பட்ட இந்தத் தேரை பக்தர்கள் அன்புடன் வைரத் தேர் என அழைக்கின்றனர்.
ஒவ்வொரு ஆண்டு பங்குனி உத்திர திருவிழாவின் பூரம் நட்சத்திரம் அன்று இந்த வைரத் தேர் வீதியுலா வந்து பக்தர்களின் பேரன்பை பெறுகிறது. மற்ற முருகன் கோயில்களிலிருந்து மாறுபட்டு, இங்குள்ள மயில் வாகனம் இடப்புறம் தலை, வலப்புறம் தோகை அமைப்புடன் அரிய காட்சியளிக்கிறது.
இந்த கோயில் அமைந்துள்ள மலை யானை படுத்திருப்பதைப் போல தோற்றமளிக்கிறது. முழுவதும் மலையை குடைந்து உருவாக்கப்பட்ட குடைவரைக் கோயில் என்பதால், இங்கு விமானமும் சுற்றுப்பிராகாரமும் இல்லை. பக்தர்கள் மலையைச் சுற்றியே பிராகார வலம் வருகின்றனர். சுமார் 300 அடி உயரமுள்ள இந்த மலையில், கருவறையும் அர்த்த மண்டபமும் நேரடியாகப் பாறையை குடைந்தே அமைக்கப்பட்டுள்ளன.
இத்தலத்தில் அருள்பாலிக்கும் முருகப்பெருமான் 1 முகம், 6 கரங்கள் கொண்ட அரிய கோலத்தில் காட்சியளிக்கிறார். இந்த ரூபத்தில் முருகன் தென்னிந்தியாவில் இந்தத் தலத்தில் மட்டும் தான் இருப்பதாகக் கூறப்படுகிறது. கோயிலின் தெப்பக் குளத்தில் உள்ள நீர் பால் போன்ற நிறத்தில், மிகச் சுத்தமான குடிநீராக விளங்குகிறது. அதனால் சுற்றுப்புற கிராம மக்கள் அனைவரும் இந்தக் குளத்தின் நீரையே குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர்.
இத்தலத்தில் அருள்பாலிக்கும் முருகப்பெருமான் 1 முகம், 6 கரங்கள் கொண்ட அரிய கோலத்தில் காட்சியளிக்கிறார். இந்த ரூபத்தில் முருகன் தென்னிந்தியாவில் இந்தத் தலத்தில் மட்டும் தான் இருப்பதாகக் கூறப்படுகிறது. கோயிலின் தெப்பக் குளத்தில் உள்ள நீர் பால் போன்ற நிறத்தில், மிகச் சுத்தமான குடிநீராக விளங்குகிறது. அதனால் சுற்றுப்புற கிராம மக்கள் அனைவரும் இந்தக் குளத்தின் நீரையே குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர்.
Read more: தூங்குவதற்கு முன் வெதுவெதுப்பான நீரில் நெய் கலந்து குடித்தால் இத்தனை நன்மைகளா..? நோட் பண்ணுங்க..!



