கர்ப்பம் ஆக்கிவிட்டு காதலன் ஏமாற்றியதால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் லேபர் காலனியைச் சேர்ந்தவர் சரவணகுமார். இவரது மகள் ஹரிணி (20), தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியர் கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்து வருகிறார். இவரது, வீட்டின் அருகே ராகுல் காந்தி என்ற இளைஞர், தனது அக்கா வீட்டில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார். இருவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அது நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இந்த பழக்கத்தின்போது இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். இதனால், ஹரிணி இரண்டு முறை கர்ப்பமாகி உள்ளார். அதனை மாத்திரை பயன்படுத்தி கலைத்ததாக கூறப்படுகிறது.
![காதல் மோகத்தால் 2 முறை கர்ப்பம்..!! அக்கா திட்டியதால் உறவை துண்டித்த இளைஞர்..!! அதிர்ச்சி சம்பவம்..!!](https://1newsnation.com/wp-content/uploads/2022/08/Sex-1-e1668568953180.jpg)
இந்நிலையில், இந்த உறவு ராகுலின் அக்காவுக்கு தெரியவரவே, இருவரும் வேறு சமூகத்தை சார்ந்தவர்கள் என்பதால், ஹரிணியின் வீட்டில் சென்று சண்டையிட்டுள்ளார். இதனால் அந்த இளைஞர் காதலியுடனான உறவை துண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த பெண் லைக்கு சாயம் அடிக்க பயன்படும் சூப்பர் வாஸ்மால் எனும் திரவத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். தொடர்ந்து புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் அவர் தற்போதும் கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, அந்த இளைஞரை உடனடியாக கைது செய்ய பெண்ணின் உறவினர்கள் கோரிக்கை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.