இரண்டாவது முறை உல்லாசத்திற்கு வர மறுத்த கள்ளக்காதலியை இரும்பு ராடால் அடித்து, கொடூரமாக கொலை செய்த கள்ளக்காதலனை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தருமபுரி மாவட்டம் சித்தேரியை அடுத்த வெள்ளாம்பள்ளியை சேர்ந்தவர் பார்வதி (32). கடந்த 9 வருடங்களுக்கு முன் இவரது கணவர் இறந்துவிட்டதால், 2 குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்து வந்தார். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த சக்திவேல், (42) என்பவருடன் பார்வதிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. அடிக்கடி இருவரும் கீழானூர் காப்பு காட்டு பகுதிக்குச் சென்று உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். வழக்கம் போல சக்திவேல் பார்வதியை அரூருக்கு வரவழைத்து, அரூரில் இருந்து இருசக்கர வாகனத்தின் மூலம் இருவரும் காட்டுக்குள் சென்று உல்லாசமாக இருந்துள்ளனர். பின்னர், இரண்டாவது முறை சக்திவேல் பார்வதியை உல்லாசத்திற்கு அழைத்துள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால், ஏற்பட்ட ஆத்திரமடைந்த சக்திவேல் மறைத்து வைத்திருந்த இரும்பு ராடால் பார்வதியின் தலையில் அடித்து முகத்தை சிதைத்துள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த பார்வதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து, சக்திவேல் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதை அடுத்து 2-வது மனைவியின் வீட்டில் பதுங்கி இருந்த சக்திவேலை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.