பேருந்துகளில் கட்டணமின்றி பயணிப்போரை “ஓசி” என்று தரம் தாழ்ந்து விமர்சித்து பேசிய ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜனுக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில்; கட்டணமின்றி பேருந்துகளில் பயணம் செய்யும் மகளிரை “ஓசி” என்று திமுகவைச் சார்ந்த ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் விமர்சித்திருப்பது கண்டனத்துக்குரியது. இதற்கு முன் முன்னாள் திமுக அமைச்சர் தனனக்ஷற அவர்களும் இதே போன்று பேருந்துகளில் கட்டணமின்றி பயணிப்போரை “ஓசி” என்று தரம் தாழ்ந்து விமர்சித்ததும், திமுக பாராளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் அவர்கள் “ரூ.1000 வாங்கியதால் தானே பளபளனு இருக்கீங்க” என்று பெண்களைக் கொச்சையாக விமர்சித்தது இருந்தார்.
திமுக மூத்த அமைச்சர். துரைமுருகன் அவர்கள் “அம்மாவுக்கும் ரூ.1000, பொண்ணுக்கும் ரூ.1000” என சபை நாகரிகமன்றி விமர்சித்ததும் குறிப்பிடத்தக்கது. மக்கள் நலனை மேம்படுத்தும் போர்வையில் திட்டங்களை அமல்படுத்தி அதன் விளம்பரங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பதும், பின் பயனாளிகளை “ஓசி” என்று கீழ்த்தரமாக விமர்சிப்பதும் தான் திராவிட மாடல் போலும்.
ஒவ்வொரு முறையும் பெண் பயனாளிகளை விமர்சிப்பதில் காட்டும் முனைப்பை ஓட்டை உடைசலாக இருக்கும் பேருந்துகளை சரிபடுத்துவதிலோ அல்லது அனைத்து மகளிருக்கும் 1000 ரூபாய் கிடைப்பதை உறுதி செய்வதிலோ திமுக தலைவர்கள் காட்டாதது ஏன்..? அதிகார மமதையில், எளிய மக்களை எள்ளி நகையாடி ஏளனப்படுத்துவது ஏற்புடையதல்ல! மகளிரை அவமதிக்கும் திமுக அரசு இனியாவது திருந்தட்டும் என தெரிவித்துள்ளார்.
Read More: இரவோடு இரவாக தமிழகம் முழுவதும் 18 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்…!