பரபரப்பு…! போலி மருத்துவரின் கிளினிக்கை திறந்து வைத்த திமுக எம்.பி ஆ.ராசா…!

மேட்டுப்பாளையத்தில் போலி மருத்துவரின் கிளினிக்கை ஆ.ராசா திறந்து வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டத்தில் போலி கிளினிக்குகள் ஏதும் செயல்படுகிறதா..? என்று மருத்துவத்துறை இணை இயக்குனர் சந்திரா தலைமையிலான குழுவினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் காரமடை வெள்ளியங்காடு பகுதியில் கே.ஜே.என்ற பெயரில் கிளினிக் ஒன்று செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இங்குள்ள டாக்டர் பெயர் மனோஜ் பிரபு என்றும், அவரது மருத்துவ அங்கீகார படிப்பு என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இது குறித்து சுகாதாரத்துறையினர் ஆய்வு செய்தனர். இதில், அரசுமருத் துவமனையில் பணியாற்றும் மனோஜ்குமார் என்பவரின் மருத்துவ பதிவு எண்ணை பயன்படுத்தி மேட்டுப்பாளையம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட காரமடை, கணுவாபாளையம் பகுதியில் உள்ள ஜே.ஜே கிளினிக் என்ற பெயரில் மருத்துவமனை நடத்திவந்த ஜெயஜோதி என்பவர் போலி மருத்துவர் என விசாரணையில் தெரியவந்ததால் கைது செய்யப்பட்டார்.

மேற்படி மருத்துவமனை கடந்த ஜனவரி மாதம் 22ம் தேதி, திமுகவின் துணைப் பொதுச்செயலாளரும், நீலகிரி பாராளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா-வால் திறந்து வைக்கப்பட்டதாகும். போலி மருத்துவர் ஒருவரின் மருத்துவமனையை தொகுதி எம்.பி., ஒருவரே நேரில் வந்து திறந்து வைத்த சம்பவம் நீலகிரி தொகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Vignesh

Next Post

கெட்ட சக்தி, பண கஷ்டம் தீர உங்கள் வீட்டில் இந்த 3 பொருட்கள் இருந்தால் போதும்..!! இனி பக்கத்துலயே நெருங்காது..!

Sat Apr 13 , 2024
இந்த 3 பொருட்களை கொண்டு தூபம் போட்டால் கொடிய கண் திருஷ்டியும் உங்களை விட்டு நீங்கி விடும். நம் முன்னோர்கள் காலத்தில் இருந்தே கண் திருஷ்டி, பில்லி, சூனியம் போன்ற கொடிய சக்திகள் இருந்து வருகிறது. நம் மீது பொறாமை குணம் கொண்டவர்களால், தங்களுக்கு ஆகாதவர்களால் இது போன்ற கொடிய செயல் செய்யப்படுகிறது. அதாவது ஒருவரின் தீய எண்ணங்களின் வெளிப்பாடே கண் திருஷ்டி ஆகும். கண் திருஷ்டியால் வீட்டில் சோக […]

You May Like