நடைப்பயிற்சி என்றால் பொதுவாக அதிகாலை நேரத்தில் செய்வதுதான் என பலர் நினைக்கின்றனர். ஆனால், மாலை நேர நடைப்பயிற்சி கூட பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இன்று பலருக்கும் காலையில் நேரம் இருக்கவில்லை. எனவே, மாலை நேரத்தை உடற்பயிற்சிக்காக பயன்படுத்துவது சிறந்த விருப்பமாக மாறியுள்ளது.
உடற்பயிற்சியை மாலை நேரத்தில் செய்வது நல்லது என நிபுணர்களும் கூறுகின்றனர். இன்றைய வாழ்க்கை முறை, வேலைபளு மற்றும் உணவுப் பழக்கங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால், இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை பலர் உடல்நலக் கோளாறுகளை எதிர்கொள்கிறார்கள். இது போன்ற சூழ்நிலையில், மாலை நடைப்பயிற்சி ஒரு எளிய தீர்வாக விளங்குகிறது.
இப்போது மாலை நடைப்பயிற்சியின் முக்கிய நன்மைகளைப் பார்ப்போம்:
உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும்: மாலை நேரத்தில் சுறுசுறுப்பாக நடப்பது உடலை கட்டுப்படுத்துவதுடன், புத்துணர்ச்சியையும் அளிக்கிறது.
வேலைப் பளுவை குறைக்கும்: நாள் முழுவதும் கடுமையான வேலைக்குப் பிறகு, பூங்காவில் ஒரு சிறிய நடை மனதையும், தசைகளையும் தளர்த்துகிறது.
நன்றாக தூங்க உதவும்: தூக்கக் கோளாறு உள்ளவர்கள் மாலையில் நடைப்பயிற்சி செய்தால், சிறந்த தூக்கத்தைக் காண முடியும்.
செரிமானத்தை மேம்படுத்தும்: இரவு உணவுக்கு பிறகு நடைப்பயிற்சி மேற்கொள்வது செரிமானத்தை அதிகரிக்கிறது.
முதுகுவலியை குறைக்கும்: நேரம் முழுவதும் அமர்ந்திருப்பதால் ஏற்படும் முதுகு வலியை குறைக்க, மாலை நடை உதவுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி உயரும்: முறைப்படியான நடை உங்கள் உடலை இயக்கத்தில் வைக்கிறது, இதனால் நோய் எதிர்ப்பு சக்தி மேம்படுகிறது.
தசை வலிமை அதிகரிக்கும்: தசைகள் உறுதியானதும், வலிமையானதும் ஆகும்.
எடை குறைக்க உதவும்: தினமும் 30 நிமிடங்கள் நடந்தாலே கூட, அதிகப்படியான கலோரி எரிந்து, எடை குறையத் தொடங்கும்.
மனச்சோர்வைக் குறைக்கும்: மாலை நடை மனதில் உள்ள அழுத்தங்களை வெளியேற்றும். மனச்சாந்தி உண்டாகும்.
மாலை நடைப்பயிற்சி என்பது உங்கள் ஆரோக்கிய வாழ்க்கைக்கு ஒரு சிறந்த முதலீடு. காலையிலோ மாலையிலோ நடப்பது முக்கியம். ஆனால், காலையில் நேரமின்றி தவிக்கும் நீங்கள், இந்த மாலை நடை பழக்கத்தை இன்று தொடங்குங்கள். உங்களுடைய உடலும் மனதும் நன்றாக உணரும்!