திருமண ஆசைக்காட்டி ரூ.60 லட்சம் மோசடி செய்த டாக்டர்.!

சென்னை பகுதியில் அசோக்நகரில் கவிதா என்பவர் வசித்து வருகிறார். இவர், மனோஜ் சார்லஸ் என்பவரை கடந்த 3 வருடங்களாக காதலித்துள்ளார்.


கடந்த சில ஆண்டுகளாக மனோஜ் சார்லஸ் கவிதாவை திருமணம் செய்கிறேன் என்று ஆசைவார்த்தைகளை கூறி, கொஞ்ச கொஞ்சமாக ரூ.60 லட்சத்தை பெற்றுள்ளார்.

இதனை தொடர்ந்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கவிதா கேட்டுள்ளார். பல்வேறு காரணங்களை கூறி திருமணம் செய்யாமல் தவிர்த்துள்ளார். அத்துடன் கவிதாவிடம் பேசுவதையும் தவிர்த்துள்ளார். இதனையடுத்து, காதலித்து தன்னை திருமணம் செய்யாமல் ஏமாற்றி வந்ததாகவும், தன்னிடம் இருந்து பெற்ற பணத்தையும் திரும்ப என்னிடம் பெற்று தருமாறு மனோஜ் சார்லஸ் மீது கவிதா அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இது பற்றி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் , மனோஜ் சார்லஸை பிடித்து விசாரித்த போது, பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவம் பயின்றதும், இவரை காதலித்து, திருமணம் செய்து கொள்வதாக கூறி பணத்தை திருடியதும் தெரிய வந்துள்ளது. அதனை தொடர்ந்து கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

1newsnationuser5

Next Post

தமிழகத்திற்கு விடுக்கப்பட்ட "ரெட் அலர்ட்" வாபஸ்...! இருந்தாலும் இது இருக்கு?

Sat Nov 12 , 2022
தென்மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியினால் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக கனமழை முதல் மிக கனமழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் நேற்று விடிய விடிய மழை கொட்டி தீர்த்து இருக்கிறது. கனமழையின் காரணமாக தமிழகத்தில் 27 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வங்கக்கடலில் தொடர்ந்து நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் இன்று அதிகனமழைக்கு […]
முன்கூட்டியே உருவான புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி..! அதீத கனமழைக்கு பெய்யும்..! எச்சரிக்கும் வானிலை மையம்

You May Like