சென்னை பகுதியில் அசோக்நகரில் கவிதா என்பவர் வசித்து வருகிறார். இவர், மனோஜ் சார்லஸ் என்பவரை கடந்த 3 வருடங்களாக காதலித்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக மனோஜ் சார்லஸ் கவிதாவை திருமணம் செய்கிறேன் என்று ஆசைவார்த்தைகளை கூறி, கொஞ்ச கொஞ்சமாக ரூ.60 லட்சத்தை பெற்றுள்ளார்.
இதனை தொடர்ந்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கவிதா கேட்டுள்ளார். பல்வேறு காரணங்களை கூறி திருமணம் செய்யாமல் தவிர்த்துள்ளார். அத்துடன் கவிதாவிடம் பேசுவதையும் தவிர்த்துள்ளார். இதனையடுத்து, காதலித்து தன்னை திருமணம் செய்யாமல் ஏமாற்றி வந்ததாகவும், தன்னிடம் இருந்து பெற்ற பணத்தையும் திரும்ப என்னிடம் பெற்று தருமாறு மனோஜ் சார்லஸ் மீது கவிதா அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இது பற்றி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் , மனோஜ் சார்லஸை பிடித்து விசாரித்த போது, பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவம் பயின்றதும், இவரை காதலித்து, திருமணம் செய்து கொள்வதாக கூறி பணத்தை திருடியதும் தெரிய வந்துள்ளது. அதனை தொடர்ந்து கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.