மது பிரியர்கள் அதிகமாக இருந்து வரும் நிலையில், மது அருந்தும் போது சில உணவுகளை சேர்த்து உண்ணும் போது அதனால் பல மோசங்கள் உடலுக்கு உண்டாகின்றன.
மது அருந்தும் போது பால் சேர்த்து கொள்வதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அடிக்கடி மது அருந்தும் போது, வயிற்றின் பகுதிகளில் வெகுவாக எரிச்சலடைய செய்கிறது. எனவே மது அருந்திய பிறகும், அதற்கு முன்பும் பால் குடிப்பதை தவிர்ப்பது நல்லது.
பீட்சா பலருக்கும் மிகவும் விருப்பமான உணவாக இருக்கலாம். ஆனால் இது காலப்போக்கில் செரிமான ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தலாம். முக்கியமாக பீட்சாவை தூங்குவதற்கு முன் சிற்றுண்டியாக எடுத்து கொண்டால் மோசமான விளைவுகளை ஏற்படுத்தி விடலாம்.
டார்க் சாக்லேட் சாப்பிடுவது சில ஆரோக்கிய பலன்களை அளித்தாலும், அதனை மதுவுடன் சேர்த்து உண்ணும் போது அதனால் ஏற்படும் பக்க விளைவுகளே அதிகமாக இருக்கும். சாக்லேட்டில் உள்ள கோகோ, கொழுப்பு மற்றும் காஃபின் ஆகியவை இரைப்பை குடல் பிரச்சினைகளைத் தூண்டுகிறது.