கேரளத்தின் முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான பினராயி விஜயன் தொடர்பான இடங்களில் அமலாக்கத்துறை இன்று சோதனை நடத்தியது.. பினராயி விஜயனின் திருவனந்தபுரம், கண்ணூர் வீடு, அவரின் மருமகன் முகமது ரியாஸ் தொடர்புடையா 12 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டது..
பினராயி விஜயனின் மகள் வீணாவுக்கு சொந்தமான நிறுவனமான ‘எக்சாலஜிக் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்’ (Exalogic Solutions Pvt. Ltd.) தொடர்பான நிதிப் பரிவர்த்தனைகள் குறித்த ‘கொச்சின் மினரல்ஸ் அண்ட் ரூடைல் லிமிடெட்’ (CMRL) வழக்கில் இந்த சோதனை நடத்தப்பட்டது..
அதிகாரிகள் அளித்த தகவலின்படி, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) விதிகளின் கீழ், திருவனந்தபுரத்தில் உள்ள விஜயனின் வாடகை இல்லம் மற்றும் வேறு 12 இடங்களிலும் அமலாக்க இயக்குநரகம் சோதனைகளை மேற்கொண்டு வருகிறது.
‘கொச்சின் மினரல்ஸ் அண்ட் ரூடைல் லிமிடெட்’ (CMRL) என்ற தனியார் நிறுவனம், 2018 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில், விஜயனின் மகள் டி. வீணாவின் நிறுவனமான ‘எக்சாலஜிக் சொல்யூஷன்ஸ்’-க்கு 1.72 கோடி ரூபாயை சட்டவிரோதமாக வழங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அந்தத் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் (IT firm), CMRL நிறுவனத்திற்கு எவ்வித சேவையையும் வழங்காத நிலையிலும் இத்தொகை வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த வழக்கில் அமலாக்க இயக்குநரகத்தின் நடவடிக்கைகளை ரத்து செய்யக் கோரி CMRL நிறுவனம் தாக்கல் செய்த மனுவை, கேரள உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமையன்று தள்ளுபடி செய்தது. இந்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்துவதற்காக, அமலாக்க இயக்குநரகம் 2024-ஆம் ஆண்டில் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் (PMLA) வழக்கு பதிவு செய்திருந்தது.
Read More : ஆதார் பயனர்களே அலர்ட்..! புதிய செயலி குறித்து மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்..!



