தவெக தலைவர் விஜய்யிடம், எடப்பாடி பழனிச்சாமி கூட்டணி பேச்சுவார்த்தை…!

EPS vijay 2025

கரூர் துயரத்தால் முடங்கியிருக்கும் விஜய்யிடம், எடப்பாடி பழனிச்சாமி கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.


கரூரில் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி மற்று தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவருமே நேரில் சென்று ஆறுதல் சொல்லிவிட்டனர். மாநிலங்களவை எம்.பி. கமல்ஹாசனும் நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அதேபோல் பாஜக தலைவர் நட்டா அமைத்த தே.ஜ.கூட்டணி எம்.பி.க்கள் 8 பேர் அடங்கிய குழுவும் நேரில் ஆய்வு செய்து பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் கூறியது.

மேலும் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத் தலைவரும் நேரில் ஆய்வு செய்தார். பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்தித்தார். முன்னதாக, அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் கரூரில் தீவிர விசாரணை மேற்கொண்டது. அதேபோல் உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்புப் புலனாய்வுக் குழுவும் விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், விஜய் கரூருக்குச் செல்லாதது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. இந்தச் சூழலில் நேற்று தொடங்கி விஜய் பாதிக்கப்பட்டோரிடம் வீடியோ கால் மூலம் பேசி வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.

கரூர் துயரத்தால் முடங்கியிருக்கும் விஜய்யிடம், எடப்பாடி பழனிச்சாமி கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த அக்டோபர் 6-ம் தேதி இருவரும் அரைமணி நேரம் தொலைபேசியில் உரையாடியதாகவும், ஜனவரிக்கு பிறகு தனிப்பட்ட முறையில் எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்க விஜய் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. மேலும், கரூர் விஷயத்தில் முழு ஆதரவு அளிப்பதாக விஜய்யிடம் எடப்பாடி கூறியதாகவும் அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Vignesh

Next Post

ஷாக்!. பாட்டில் தண்ணீர், மீன் உட்கொள்வதால் மூளைக்கு கடும் ஆபத்து!. ஆய்வு கூறுவது என்ன?

Wed Oct 8 , 2025
நீங்கள் குடிக்கும் பாட்டில் தண்ணீர் அல்லது ஆரோக்கியமான மீன் உங்கள் மனநிலையைக் கெடுக்கும் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? ஆம், இந்தப் பொருட்களில் உள்ள மைக்ரோபிளாஸ்டிக் உடலுக்கு மட்டுமல்ல, மூளை மற்றும் மன ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிப்பதாக ஒரு புதிய ஆய்வு அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டுள்ளது. ஆராய்ச்சியின் படி, இந்த மைக்ரோபிளாஸ்டிக் துகள்கள் நமது குடல் நுண்ணுயிரியைப் பாதிக்கின்றன, இது மனச்சோர்வு மற்றும் பெருங்குடல் பிரச்சினைகள் போன்ற அறிகுறிகளுக்கு வழிவகுக்கும். […]
microplastics

You May Like