சிறுபான்மை மாணவர்களுக்கு ரூ.30 லட்சம் வரை கல்வி கடன்…! விண்ணப்பம் ஆரம்பம்…! முழு விவரம்

money e1749025602177

குறைந்த வட்டி விகிதத்தில் சுயதொழிலுக்காக வழங்கப்படும் கடன்திட்டத்தை சிறுபான்மையினர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என சென்னை ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அழைப்பு விடுத்துள்ளார். ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகம், மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், மாவட்ட கூட்டுறவு வங்கி அல்லது அதன் கிளைகள் ஆகிய அலுவலகங்களில் விண்ணப்பத்தை பெற்று வங்கி கோரும் ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.


சென்னை மாவட்டத்தில் சிறுபான்மையினருக்கு, சுய வேலைவாய்ப்பு மற்றும் வருமானம் ஈட்டுதலுக்கான செயல்பாடுகளுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் கடனுதவி வழங்கப்படுகிறது. தனிநபர், சுய உதவி குழு சிறுதொழில், கைவினை கலைஞர்களுக்கான கடன், மற்றும் கல்விக் கடன் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற வெவ்வேறு வருமானம் சார்ந்த பயனாளிகளுக்கு கடன் மற்றும் வட்டி விகிதங்களின் மாறுபட்ட அளவுடன் கைவினை கலைஞர்களுக்கு அதிகபட்ச கடனாக ரூ.10 லட்சம், சுய உதவிக் குழுக் கடன் நபர் ஒருவருக்கு ஒரு லட்சம் ரூபாயும், கடன் வழங்கப்படுகிறது.

மேலும், சிறுபான்மையின மாணவ, மாணவியர் அரசால் அங்கீகரிப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை, முதுநிலை தொழிற்கல்வி, தொழில்நுட்பக் கல்வி பயின்றால், அதிக பட்சமாக ரூ.30 லட்சம் வரை கல்வி கடனுதவி வழங்கப்படுகிறது. சிறுபான்மையின மக்கள் இத்திட்டத்தை அதிக அளவில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

மாவட்டத்தில் வசிக்கும் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், புத்த மதத்தினர், சீக்கியர்கள், பார்சியர்கள் மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையின மக்கள் கடன் விண்ணப்பங்களை ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகம், மாவட்ட சிறுபான்மையினர் அலுவலகம், மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், மாவட்ட, மத்திய கூட்டுறவு வங்கி அல்லது அதன் கிளைகள் அல்லது நகர கூட்டுறவு வங்கி அல்லது தொடக்க வேளாண்மை கூட்டுறவு அலுவலகங்களில் பெற்று அதனை பூர்த்தி செய்து வங்கி கோரும் உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்கலாம்.

Read More: அண்ணா பல்கலைக்கழகமாணவி பாலியல் வழக்கு… எந்த அரசியல் தலையீடும் இல்லை…! டிஜிபி விளக்கம்…!

Vignesh

Next Post

இந்திரனுக்கும் பெண்கள் மாதவிடாய்க்கும் இப்படியொரு தொடர்பா?. சாபத்தால் வந்த வினை!. விஷ்ணு கொடுத்த வரம்!

Wed Jun 4 , 2025
ஒருமுறை குரு பிரகஸ்பதி இந்திரன் மீது கோபம் கொண்டார். இதை அனுகூலமாக எடுத்துக் கொண்டு அரக்கர்கள் தேவலோகத்தைத் தாக்கினர். அப்போது இந்திரன் ராஜ்ஜியத்தை விட்டு ஓடி பிரம்மாவை அணுகினார். அப்போது பிரம்மா இந்திரனிடம் “உனக்கு இராஜ்ஜியம் கிடைக்க வேண்டுமென்றால் நீ ஒரு முனிவருக்கும் பணிவிடை செய்ய வேண்டும். அந்த முனிவர் மனம் மகிழ்ந்து போனால் உனக்கு உன் ராஜ்ஜியம் கிடைக்கும்” என்றார். அவரின் அறிவுரை படி ஒரு முனிவருக்கு இந்திரன் […]
vishnu indra periods 11zon

You May Like