Modi: தேர்தல் பத்திர விவகாரம்!… பிரதமர் மோடியின் விளக்கமும்!… சரமாரி கேள்வியும்!

Modi: தேர்தல் பத்திர விவகாரம் குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பிரதமர் மோடி பதிலளித்துள்ளார்.

தேர்தல் பத்திரம் மிகப்பெரிய ஊழல் என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இது தொடர்பாக அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பிதமர் மோடி, இந்த விவாகரத்தில் நான் என்ன செய்து விட்டேன். எதனால் கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது என சொல்லுங்கள். இதற்காக இவர்கள் (எதிர்க்கட்சிகள்) எல்லோரும் சந்தோசப்பட்டு ஆடுகிறார்கள். இவர்கள் எல்லோரும் துன்பம்தான் படப்போகிறார்கள்.

இந்த புத்தாசாலிகளிடம் கேட்கிறேன். 2014-க்கு முன் எத்தனை தேர்தல் நடந்துள்ளது. அத்தனை தேர்தல்களிலும் எவ்வளவு செலவு ஆகியிருக்கும். அந்த பணம் எங்கிருந்து வந்தது? யாருக்கு கொடுக்கப்பட்டது என்று எந்த நிறுவனமாவது சொல்ல முடியுமா?. தற்போது மோடி வந்து தேர்தல் பத்திரத்தை உருவாக்கிவிட்டார். அதனால் உங்களால் தேட முடிகிறது. பணம் யார் கொடுத்தது. யார் வாங்கினார்கள். எப்போது கொடுத்தது. எல்லா விவரங்களும் கிடைக்கிறது. தேர்தல் பத்திரத்தில் சில குறைபாடுகள் உள்ளன. எல்லா விசயங்களும் முழுமையாக இல்லை. சில குறைகளை தீர்த்துவிட்டால், தேர்தல் பத்திரத்தில் நன்மைகள் கிடைக்கும் என்று கூறியுள்ளார்.

Readmore: கோடை விடுமுறையில் அதிரடி மாற்றம்..!! ஏமாற்றத்தில் மாணவர்கள்..!!

Kokila

Next Post

Rain: வடமாநிலங்களில் கொட்டித் தீர்க்கும் கனமழை!… மேற்கூரை இடிந்து விழுந்ததால் கவுகாத்தி விமான நிலையத்தில் பரபரப்பு!

Mon Apr 1 , 2024
Rain: அசாமில் கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக, விமான நிலையத்தில் வெள்ள நீர் நிரம்பி வழிந்தது. இதனால், விமான நிலை மேற்கூரை இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வடமாநிலமான அசாமில் திடீர் கனமழை மற்றும் சூரை காற்றினால் கவுகாத்தி சர்வதேச விமான நிலையம் சேதமடைந்தது, இதனால் விமானங்களின் புறப்பாடு தாமதமானது. மேலும் விமான முனையத்தின் ஒரு பகுதிக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் அதிகாரிகள் ஆறு விமானங்களை வேறு இடங்களுக்கு திருப்பிவிட்டனர். விமான […]

You May Like