#கன்னியாகுமரி: கணவரின் கண்முன்னே மனைவியை யானை மிதித்து கொன்ற கொடூர சம்பவம்..!

கன்னியாகுமரி மாவட்ட பகுதியில் உள்ள சித்தாறு அரசு ரப்பர் தோட்டத்தில் ரப்பர் பால் வெட்டும் பணிக்கு தொழிலாளர்கள் சென்றனர். அங்கே தோட்டத்துக்கு வந்த பெண் யானை, தொழிலாளர்களை பயமுறுத்தியது. 


இதனால் தொழிலாளர்கள் பலரும் பல வழியில் ஓடிய நிலையில், யானை ஞானவதி (50) என்பவரை மட்டும் மிதித்தது. இதில் அந்த பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதை தடுக்க வனத்துறையினர் ஏதாவது செய்திருக்க வேண்டும் என தொழிலாளர்கள் சிலர் நினைக்கின்றனர். ஏனெனில் யானைகள் அடிக்கடி வருவதைப் பற்றி தகவல் பலமுறை அளித்துள்ளனர். 

ஆனால் அவ்வாறு தகவல் அளித்த போதும் அவற்றைத் தடுக்க வனத்துறையினர் இதுவரை எந்த வித நடவடிக்கையும் செய்யவில்லை என்று அந்த பகுதி மக்களின் கூறுகிறார்கள்.

இந்த பெண்ணின் மரணமானது மிகவும் சோகமாக இருந்தது. அதுமட்டுமின்றி இறந்தவரின் கணவர் மோகன்தாஸ் எனபவர். இவரின் கண்முன்னே, மனைவியின் இறப்பானது நிகழ்ந்தது மிகவும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

1newsnationuser5

Next Post

#கள்ளக்குறிச்சி: மின்வேலியில் சிக்கி விவசாயி பரிதாப உயிரிழப்பு..!

Sat Dec 31 , 2022
கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலூர்பேட்டை அருகே உள்ள குலதீபமங்கலம் புதுக்காலனியைச் சேர்ந்தவர் தங்கவேல், 56. மின்வேலியில் சிக்கி விவசாயி உயிரிழந்தார். கடந்த 2018 செப்டம்பர் 6ம் தேதி அதே பகுதியை சேர்ந்த முருகன்,( 47).  இவர், குத்தகைக்கு விவசாயம் செய்து வந்த நிலத்தின் வழியாக நடந்து சென்றபோது, ​​காட்டுப் பன்றிகளுக்காக முருகன் வைத்திருந்த மின்வேலியில் சிக்கினார். இதில் மின்சாரம் பாய்ந்து தங்கவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  மணலுார்பேட்டை போலீசார், முருகன் மற்றும் […]
n457335964167246879403981c56a89e9a25f5a6fe20219bfefa4a9b138174c54521c598eed8cf27b2ad0d7

You May Like