இன்று காலை 10 மணி முதல் வேலைவாய்ப்பு முகாம்…! யார் யாரெல்லாம் இதில் பங்கேற்கலாம்…? முழு விவரம்

படித்து வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு, வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரும் பொருட்டு ஒவ்வொரு மாதமும் இரண்டாம், மூன்றாம், நான்காம் வெள்ளிக்கிழமையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. இன்று திருப்பத்தூர் மாவட்டத்தில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.


திருப்பத்தூா் மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் தொழில் நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் ஆகியவை இணைந்து நடத்தும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று பொதிகை பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. முகாமில் 300-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கு பெற உள்ளது.

திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள 8-ஆம் வகுப்பு முதல் பட்டயப் படிப்பு மற்றும் பொறியியல், மருத்துவம் முடித்த ஆண்கள், பெண்கள் முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம்.இம்முகாமில் தேர்வு செய்யப்பட்டவர்களின் வேலைவாய்ப்பு பதிவு ரத்து கிடையாது.

Vignesh

Next Post

இருமல் மருந்து குடித்து 18 குழந்தைகள் உயிரிழப்பு...! அதிகாரிகள் எடுத்த அதிரடி நடவடிக்கை...!

Sat Mar 4 , 2023
கலப்பட மருந்துகளை தயாரித்து விற்பனை செய்த குற்றச்சாட்டில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு உஸ்பெகிஸ்தானில் 18 குழந்தைகளின் மரணத்திற்கு இருமல் சிரப் வழிவகுத்ததாகக் கூறப்படும் மருந்து நிறுவனமான மரியன் பயோடெக் நிறுவனத்தின் மூன்று ஊழியர்கள், கலப்பட மருந்துகளை தயாரித்து விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் மருந்துப் பரிசோதகரின் புகாரின் பேரில், அதன் இயக்குநர்கள் இருவர் உட்பட, […]
images 2023 03 04T055929.779

You May Like