ஆசிரியர் தேர்வு வாரியம் குட் நியூஸ்…! விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு…! முழு விவரம்

விண்ணப்பதாரர்களிடமிருந்து பெறப்பட்ட பல்வேறு கோரிக்கைகளின் அடிப்படையில் உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு இணையவழி வாயிலாக விண்ணப்பங்கள் பெறுவதற்கான கடைசி தேதி 29.04.2024 லிருந்து 15.05.2024 மாலை 5.00 மணி வரை ஆசிரியர் தேர்வு வாரியம் நீட்டித்துள்ளது.

இது குறித்து தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு கல்வியியல் கல்லூரிகளுக்கான உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு மூலம் நேரடி நியமனம் செய்வதற்கு அறிவிக்கை எண்.02 / 2024 . நாள் . 14.03.2024 வெளியிடப்பட்டு , விண்ணப்பங்கள் இணையவழி வாயிலாக பெறப்பட்டு வருகிறது.

இந்நிலையில் , பெறப்பட்ட பல்வேறு கோரிக்கைகளின் அடிப்படையில் உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு இணையவழி வாயிலாக விண்ணப்பங்கள் பெறுவதற்கான கடைசி தேதி 29.04.2024 லிருந்து 15.05.2024 மாலை 5.00 மணி வரை நீட்டிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

அடுத்தடுத்து திடீர் நிலச்சரிவு!… பூமிக்குள் புதைந்த வீடுகள், சாலைகள், மின்கம்பங்கள்!… பீதியில் மக்கள்!

Sun Apr 28 , 2024
Landslide: காஷ்மீர் ரம்பன் மாவட்டத்தின் பெர்னோட் கிராமத்தில் தொடர்ந்து நிலச்சரிவு ஏற்பட்டதால் வீடுகள், சாலைகள், மின்கம்பங்கள் பூமிக்குள் புதைந்ததால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். காஷ்மீர் மாநிலம் ரம்பான் மாவட்டத்தின் பெர்னோட் கிராமத்தில் கடந்த வியாழன் அன்று இரவில் திடீரென ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், வீடுகள் எல்லாம் சேதம் அடைந்துள்ளது. சாலைகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மின்சார கம்பங்கள் விழுந்து மின்சார சேவை பாதிக்கப்பட்டுள்ளது. […]

You May Like