மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஒரு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 21 பேர் உயிரிழந்ததற்கு பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை இரங்கல் தெரிவித்தார். இந்தச் சம்பவத்தை ‘மிகவும் துயரமானது’ மற்றும் ‘வருத்தமளிப்பது’ என்று குறிப்பிட்ட அவர், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் தெரிவித்தார்.
பிரதமர் அலுவலகம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சம் கருணைத் தொகையாக வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். மேலும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 வழங்கப்படும்.
“மேற்கு வங்கத்தின் ஆனந்தபூரில் சமீபத்தில் நடந்த தீ விபத்து மிகவும் துயரமானது மற்றும் வருத்தமளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய நான் பிரார்த்திக்கிறேன்,” என்று தெரிவித்துள்ளது.
ஜனவரி 26 ஆம் தேதி இரவு கொல்கத்தாவின் ஆனந்தபூரில் உள்ள ‘Wow Momo’ நிறுவனத்தின் உற்பத்திப் பிரிவு மற்றும் இரண்டு கிடங்குகளில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தில் குறைந்தது 21 பேர் உயிரிழந்தனர்.. இது குறித்து விசாரணை நடத்திய காவல்துறை, அந்த வளாகத்தின் உரிமையாளரும், அலங்கார நிறுவனத்தின் உரிமையாளருமான கங்காதர் தாஸை காவல்துறை கைது செய்துள்ளது. அவர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்த விவரங்களைச் சேகரிப்பதற்காக காவல்துறை அவரிடம் விசாரணை நடத்தி வருகிறது. “மோமோ உற்பத்திப் பிரிவின் இரண்டு மூத்த அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் நிறுவனத்தின் மேலாளர் மனோரஞ்சன் ஷீட் மற்றும் துணை மேலாளர் ராஜா சக்ரவர்த்தி ஆவர். இருவரும் நரேந்திரபூர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்,” என்று காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்..
மேலும்”நாங்கள் உடல் பாகங்களை மீட்டுள்ளதால், சரியான இறப்பு எண்ணிக்கையை எங்களால் உறுதிப்படுத்த முடியவில்லை. இந்த உடல் பாகங்கள் ஒன்று அல்லது வெவ்வேறு நபர்களுக்குச் சொந்தமானதாக இருக்கலாம். டிஎன்ஏ பரிசோதனைகளுக்குப் பிறகே இதை உறுதிப்படுத்த முடியும்,” என்று கூறினார்.



