பிரபல ரவுடி வீடு புகுந்து வெட்டிக் கொலை 6 வருடங்களாக காத்திருந்த பகை.! தூத்துக்குடியில் பகீர்.!

தூத்துக்குடியை அடுத்துள்ள சங்கரபேரி பகுதியைச் சார்ந்தவர் பிரபல ரவுடி கருப்பசாமி. இவர் மீது மூன்று கொலை வழக்குகள் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் இருக்கின்றன.


இந்நிலையில் நேற்று இரவு தனது குடும்பத்தாருடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த ரவுடி கருப்பசாமியை 10 பேர் கொண்ட கும்பல் ஒன்று அவரது வீட்டிற்குள் புகுந்து சுற்றி வளைத்து சராமாறியாக வெட்டியது. இதில் ரத்த வெள்ளத்தில் மிதந்த ரவுடி துடிதுடித்து பரிதாபமாக உயிர் இழந்தார்.

உடனடியாக தூத்துக்குடி சிப்காட் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் 2017 ஆம் ஆண்டு அங்குசாமி என்பவரை கொலை செய்த வழக்கில் பழிக்கு பலியாக கருப்பசாமி கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்திருக்கிறது.

தப்பியோடிய 10 பேர் கொண்ட கும்பலை பிடிப்பதற்காக போலீசார் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர். மேலும், இது தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் குற்றவாளிகளுக்கான தேடுதல் வேட்டை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வீட்டில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த ரவுடி வீடு புகுந்து வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

1newsnationuser5

Next Post

பகலில் பதுங்கல்.. இரவில் வேட்டை.. பிரபல ரவுடியை பிடித்த போலிஸ் தீவிர விசாரணை.!

Sun Jan 29 , 2023
கடந்த வருடம் டிசம்பர் ஒன்றாம் தேதி சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் இரவு டீ குடிக்க சென்ற முகமது அர்ஷத் என்ற இளைஞரை தாக்கி ஒரு கும்பல் அவரிடம் இருந்து செல்போன் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றது. மேலும், அண்ணா நகர் பகுதியில் எட்டு பேர் கொண்ட கும்பல் இதே போன்ற வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு இருக்கிறது. இந்த இரண்டு சம்பவங்களின் சிசிடிவிக்களையும் ஆய்வு செய்த போலீசார் இரண்டு சம்பவங்களிலும் ஈடுபட்டது […]
இதுக்கா இப்படியொரு தண்டனை...மகனுக்கு சூடு போட்டு; கண்ணில் மிளகாய் பொடியை தூவிய கொடூர தாய்...கேரளாவில் பயங்கரம்!

You May Like