திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பகுதியில் அடுத்துள்ள எம்.ஆர் பாளையத்தைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம் 65 இவர் தமிழ்நாடு விவசாய இயக்கம் அமைப்பின் மாநில செயலாளராக இருந்து வருகிறார். இவருக்கு 2 மனைவிகள் என்று கூறப்படுகிறது. முதல் மனைவி உடல் நலக்குறைவாக உயிரிழந்து விட்ட நிலையில், தன்னுடைய பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மற்றொரு பெண்ணை அவர் 2வது திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இந்த நிலையில், கடந்த 15 நாட்களுக்கு முன்னால் இந்த தம்பதிகளிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கோபத்தில் தன்னுடைய தாய் வீட்டுக்கு சென்று விட்டார். சண்முகசுந்தரத்தின் மனைவி பலமுறை அவரை சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்தபோதும் நபர் வீட்டிற்கு வர சம்மதிக்கவில்லை. இதன் காரணமாக, சண்முகசுந்தரம் தனியாக வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில், சண்முகசுந்தரத்திற்கு அதே ஊரில் வசிக்கும் அவருடைய சகோதரி சுசிலா 3️வேளையும் உணவு கொடுத்து வந்தார் என்று கூறப்படுகிறது. வழக்கம்போல நேற்று காலை உணவு கொடுப்பதற்காக சகோதரி வந்த ஒரு சண்முகசுந்தரம் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அலறிக்கூச்சலிட்டார். இதனை தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
இதன் பெயரில் சம்பவ இடத்திற்கு வரைந்த காவல்துறையினர் சண்முகசுந்தரத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இந்த கொலை சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விவசாய சங்க பிரதிநிதி ஒருவர் படுபாவி செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.