டாடா குழுமம் மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் கூட்டு நிறுவனமான விஸ்தாரா ஏர்லைன்ஸ், அதன் எட்டாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு டிக்கெட்டுகளில் குறிப்பிடத்தக்க தள்ளுபடியை அறிவித்துள்ளது.
விஸ்தாரா ஏர்லைன்ஸ் தனது உள்நாட்டு மற்றும் சர்வதேச நெட்வொர்க் சேவைகளில் தள்ளுபடியை அறிவித்துள்ளது. இந்த தள்ளுபடிகள் புதிய மற்றும் ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும். குறைந்த கட்டணத்தில் விமானத்தில் பயணம் செய்ய இது ஒரு சிறந்த வாய்ப்பு, இதை தவறவிடாதீர்கள்!
விஸ்தாரா ஏர்லைன்ஸ் தனது எட்டாவது ஆண்டு விழாவை ஒரு அழகான ட்வீட்டில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் விஸ்தாராவுக்கு 8 வயது, அது ஒரு புதிய உணர்வு! நாங்கள் ஒரு புதிய திசையில் செல்லும்போது, எங்கள் வருடாந்திர விற்பனையை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். எங்கள் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான நெட்வொர்க்கில் பயணம் செய்யும் அனைத்து பயணிகளும் சிறப்பு கட்டணங்களைப் பெறலாம் என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
இப்போது விஸ்தாரா 8 ஆண்டுவிழா விற்பனையில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணத்திற்கான கட்டணங்களை பார்க்கலாம். விஸ்தாரா நிறுவனம் எகனாமி வகுப்பிற்கு ரூ.1,899, பிரீமியம் எகனாமி வகுப்பிற்கு ரூ.2,699 மற்றும் பிசினஸ் வகுப்பிற்கு ரூ.6,999 என அனைத்தையும் உள்ளடக்கிய உள்நாட்டு கட்டணத்தை அறிவித்துள்ளது.
விஸ்தாரா கட்டண இருக்கைகள் மற்றும் அதிகப்படியான பேக்கேஜ் கட்டணங்களில் சுமார் 23 சதவீதம் தள்ளுபடி வழங்குகிறது. ஜனவரி 23, 2023 முதல் செப்டம்பர் 30, 2023 வரையிலான பயணங்களுக்கும், ஜனவரி 12, 2023 வரையிலான முன்பதிவுகளுக்கும் இந்த தள்ளுபடி கிடைக்கும்.
29 நவம்பர் 2022 அன்று, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் உடனான நீண்ட கால பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்தது. தற்போது ஏர் இந்தியாவுடன் விஸ்தாராவை இணைப்பதாக டாடா குழுமம் அறிவித்தது. இந்த இணைப்பு மார்ச் 2024க்குள் நிறைவடையும் என்று டாடா குழுமம் தெறிவித்துள்ளது.