தர்மபுரி சித்தேரியை அடுத்த வெள்ளம்பள்ளியை சேர்ந்தவர் பார்வதி. இவருக்கும் ஆண்டியப்பன் என்பவருக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.ஆனால் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு கணவர் இறந்துவிட்டதால் குழந்தைகளுடன் கைரைப்பட்டியில் தனியாக வசித்து வருகிறார். மேலும் கடந்த ஒரு வருடமாக சக்திவேல் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
சக்திவேலின் முதல் மனைவி கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதால், இரண்டாவது மனைவிக்கு குழந்தை இல்லாததால், பார்வதியுடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர்.
இந்நிலையில் வழக்கம் போல் கீழானூர் காப்புக்காட்டுக்கு சென்று இருவரும் தனியாக இருந்த போது, சக்திவேல் 2வது முறையாக உல்லாசமாக இருப்பதற்கு அழைத்துள்ளார்.பார்வதி மறுத்ததால் சக்திவேல் வேறு ஒருவருடன் இருப்பதாக சந்தேகமடைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து, பார்வதியின் முகத்தில், மறைத்து வைத்திருந்த இரும்பு கம்பியால் தாக்கி கொடூரமான முறையில் சக்திவேல் படுகொலை செய்துள்ளார். பின்னர் தான் அணிந்திருந்த வெள்ளி லாக்கெட் மற்றும் செயினை எடுத்துக்கொண்டு இரண்டாவது மனைவி வீட்டிற்கு சென்றுள்ளார்.
இதையடுத்து, கீசனூர் வனப்பகுதியில் 32 வயது மதிக்கத்தக்க பெண் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததும், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு விசாரணைக்காக அனுப்பி வைத்தனர். விசாரணையில், கொலையை செய்தது சக்திவேல் என்பது உறுதியானதால், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.