எனக்கு 105 உனக்கு 98 – நான்கு தலைமுறைகளை கண்ட அக்கா தங்கை..!!

மதுரை திருமங்கலம் அடுத்த கூடக்கோவில் கிராமத்தை சேர்ந்த ராசு – வேலாயி தம்பதியினர் இவர்களுக்கு 6 மகன்களும் 3 மகள்களும் என ஒன்பது பிள்ளைகள். 93 வயதில் ராசு இயற்கை எய்தினார். இந்நிலையில் பிள்ளைகளுடன் வசித்து வரும் வேலாயிக்கு வயது 98 ஆகிறது. 98 வயதான வேலாயி அம்மாளுக்கு அவரது பிள்ளைகள் மற்றும் பேரன் பேத்திகள் பிறந்தநாள் கொண்டாட ஏற்பாடு செய்து கூட கோயிலில் உள்ள வேலாயி இல்லத்தில் பிறந்தநாள் விழா ஏற்பாடுகளை தடபுலராக செய்திருந்தனர் . வேலாயி அம்மாள் தனது மகன், மகன் வழிப்பேரன் ,பேரனின் மகன் ஆகியோர் ஏற்பாட்டின் படி 4 தலைமுறைகளை கண்ட பாட்டி வேலாயி தனது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினார். 


வேலாயி அம்மாளின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நான்கு தலைமுறை பிள்ளைகள் உடனிருந்து வாழ்த்து பெற்றதோடு கூடுதல் சிறப்பாக  வேலாயியுடன் அவரது சகோதரி கருப்பாயி அம்மாளும் பங்கேற்றது தான். சிறப்புக்கு காரணம் கருப்பாயி அம்மாளுக்கு வயது 105 ஆகிறது . 98 வயது மூதாட்டி பிறந்தநாள் விழாவில் 105 வயதான அவரது சகோதரியும் பங்கேற்று மகன்கள் பேரன் பேத்திகள் என அனைவரையும் வாழ்த்தியது கூடக்கோவில் கிராம மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

RUPA

Next Post

இதுவரையில் வங்கிகளுக்கு திரும்பி வந்த 2000 ரூபாய் நோட்டுகள் இத்தனை கோடியா…..! அடேங்கப்பா…..!

Thu Jun 8 , 2023
புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படுவதாக அறிவிக்கப்பட்ட பிறகு இதுவரையில் வங்கிகள் மூலமாக 1.80 லட்சம் கோடி மதிப்பிலான நோட்டுகள் திரும்ப வந்திருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அதாவது நாட்டில் புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகளில் இதுவரையில் 50 சதவீதம் மாற்றுதல் திரும்ப வந்துவிட்டதாக ஆர்பிஐ தெரிவித்து இருக்கிறது. 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படும் என்ற அறிவிப்பு வெளியானது முதல் இதுவரையில் 1.80 லட்சம் […]
RBI 1

You May Like