ஆஹா..! குரூப்‌-C க்கு 4,500-ற்கும்‌ மேற்பட்ட பணியிடங்கள்…! அரசு சார்பில் இலவச பயிற்சி வகுப்பு…!

மத்திய பணியாளர்‌ தேர்வாணையத்தால்‌ நடத்தப்படும்‌ குரூப்‌-சி பணிகளுக்கான ஒருங்கிணைந்த மேல்நிலைக்‌ கல்வி அளவிலான தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்‌ 19 அன்று சேலம்‌ மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில்‌ துவங்கப்படவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ வெளியிட்ட செய்தி குறிப்பில் மத்திய பணியாளர்‌ தேர்வாணையத்தால்‌ 4,500-ற்கும்‌ மேற்பட்ட குரூப்‌-சி பணிகளுக்கான ஒருங்கிணைந்த மேல்நிலைக்‌ கல்வி அளவிலான தேர்வுக்கான அறிவிப்பாணை வெவளியிடப்பட்டுள்ளது. தேர்வுக்கு www.ssc.nic.in என்ற இணையதளம்‌ வாயிலாக விண்ணப்பிக்க கடைசி நாள்‌ 04.01.2023 ஆகும்‌. இத்தேர்விற்கான கல்வித்தகுதி, பன்னிரெண்டாம்‌ வகுப்பு தேர்ச்சி ஆகும்‌. மேலும்‌, 01.01.2022 அன்றைய நிலையில்‌ எஸ்‌.சி. எஸ்‌.டி பிரிவினர்‌ 32 வயதுக்குள்ளும்‌ இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்‌ 30 வயதுக்குள்ளும்‌ இருத்தல்‌ வேண்டும்‌.


முன்னாள்‌ இராணுவத்தினர்‌ மற்றும்‌ மாற்றுதிறனாளிகளுக்கு நடைமுறை விதிகளின்படி வயது வரம்பில்‌ சலுகை வழங்கப்பட்டுள்ளது. தேர்வுக்‌ கட்டணமாக ரூ.100/- நிர்ணயம்‌ செய்யப்பட்டுள்ளது. இதில்‌ பெண்கள்‌, எஸ்‌.சி, எஸ்‌.டி வகுப்பினர்‌ மற்றும்‌ மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம்‌ செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

சேலம்‌ மாவட்டத்தைச்‌ சார்ந்த தகுதியும்‌ விருப்பமும்‌ உள்ள பன்னிரெண்டாம்‌ வகுப்பு தேர்ச்சி பெற்ற இளைஞர்கள்‌ அதிக அளவில்‌ இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும்‌ வகையில்‌ சேலம்‌ மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில்நெறி வழிகாட்டும்‌ மையத்தில்‌ சேவை மையம்‌ அமைக்கப்பட்டுள்ளது. மேலும்‌, இத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு 19.12.2022 அன்று காலை 11 மணியளவில்‌ இலவச பயிற்சி வகுப்புகள்‌ துவங்கப்பட உள்ளன. இது தொடர்பான விவரங்களுக்கு 94990 55941 என்ற அலைபேசி எண்ணில்‌ தொடர்பு கொள்ளலாம்‌ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

TNPSC குரூப்-1 தேர்வுக்கு 13-ம் தேதி தான் கடைசி நாள்...! எப்படி விண்ணப்பிப்பது...? முழு விவரம் இதோ...

Thu Dec 15 , 2022
குரூப்-1சி முதல்நிலைத் தேர்வுக்கு ஜனவரி 13-ம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம் என அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இது குறித்து அரசுப் பணியாளர் தேர்வாணைய செயலாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; பள்ளிக்கல்வித்துறையில் 11 மாவட்ட கல்வி அலுவலர் (குரூப்-1சி) பதவிக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்விற்கு தகுதியானவர்கள் 2023 ஜனவரி 13-ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விண்ணப்பத்தில் திருத்தங்கள் இருந்தால் ஜனவரி 18-ம் […]
tnpsc

You May Like