மூத்த குடிமக்களுக்கான இலவச ஆன்மிக பயணம் ஜூலை 18-ம் தேதி தொடக்க உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டு மூத்த குடிமக்களுக்கு (Senior Citizen) தமிழ்நாடு அரசின் இந்துசமய அறநிலையத்துறை முக்கிய செய்தியை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் இருக்கும் பிரபலமான அம்மன் கோவில்களுக்கு அரசே உங்களை இலவசமாக அழைத்துச் செல்ல உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மூத்த குடிமக்களை ஆடி மாத அம்மன் கோயில்களுக்கு இலவச ஆன்மிக பயணம், ஜூலை 18, 25, ஆக.1, 8, 15 ஆகிய தேதிகளில் 5 கட்டங்களாக அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான விண்ணப்பங்களை அறநிலையத்துறை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த பயணத்தில் பங்கேற்பவர்களுக்கு சில நிபந்தனைகளையும் இந்துசமய அறநிலையத்துறை விதித்துள்ளது. நீங்கள் 60 வயது முதல் 70 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும். வயதுக்கான சான்றிதழ் மற்றும் உடல் நற்தகுதி மருத்துவச் சான்றிதழ் கட்டாயம் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர்களிடம் இருந்து பெற வேண்டும்.
உடன் சிறு குழந்தைகளை அழைத்து வர அனுமதியில்லை. ஆதார் கார்டு, பான் கார்டு ஆகியவற்றை கொடுக்க வேண்டும். ஆண்டு வருமானம் 2 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். வருமான சான்று வட்டாட்சியரிடம் பெற்று இணைக்க வேண்டும். இந்து மதத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். இந்த பயணம் மொத்தம் 5 கட்டங்களாக அழைத்துச் செல்லப்பட உள்ளனர். முதல் கட்ட பயணத்துக்கு விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட வேண்டிய கடைசி நாள் 11.07.2025, முதல் கட்ட பயணம் தொடங்கும்.
Read more: முன்னாள் அமைச்சர் முன்னிலையில் திமுக உள்ளிட்ட கட்சிகயை சேர்ந்த 500 பேர் அதிமுகவில் இணைந்தனர்…!