Gold | ரூ.53,000-ஐ நெருங்கும் தங்கம் விலை..!! ஒரே நாளில் ரூ.840 உயர்வு..!! நகைப்பிரியர்கள் அதிர்ச்சி..!!

சென்னையில் 22 ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.840 அதிகரித்துள்ளது.

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி, தங்கம் விலை கடந்த சில மாதங்களாக உயர்வதும், குறைவதுமாக இருந்து வந்தது.

இந்த நிலையில், சென்னையில் 22 ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.840 அதிகரித்து சவரன் 52,920 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 105 ரூபாய் அதிகரித்துள்ளதால், 6,615 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. திடீரென தங்கத்தின் விலை சவரன் 53 ஆயிரம் ரூபாயை நெருங்குவதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து கிராம் 87-க்கு விற்பனையாகிறது. இதன் மூலம் வெள்ளி கிலோவுக்கு 2,000 ரூபாய் உயர்ந்து 87,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வால் சாமானிய மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளது.

Read More : BREAKING | திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி உடல்நலக்குறைவால் காலமானார்..!!

Chella

Next Post

வாக்காளர்களுக்கு பரிசு...? அண்ணாமலை மீது தேர்தல் ஆணையத்தில் திமுக புகார்...!

Sat Apr 6 , 2024
முதல் தலைமுறை வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறி திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கோவையில் முதல் தலைமுறை வாக்காளர்களை அழைத்து நிகழ்ச்சி ஒன்றை பாஜக சார்பில் ஏற்பாடு செய்துள்ளனர், அதில் பங்கேற்பவர்களுக்கு பரிசு கொடுக்கப்படும் என அண்ணாமலை வெளியிட்ட விளம்பரத்தை கண்டித்து திமுக வழக்கறிஞர் சரவணன் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார். அந்த நிகழ்ச்சி தன்னார்வலர்களால் நடத்தப்பட்ட நிகழ்ச்சி, அதற்கும் பாஜகவினருக்கும் எந்த சம்பந்தமும் […]

You May Like