சென்னை விமான நிலையத்தில் 2 கோடி ரூபாய் மதிப்பிலான 3 கிலோ தங்கம் பறிமுதல்…..!

இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து நேற்று விமானம் சென்னைக்கு வந்தது. அப்போது அந்த விமானத்தில் இருந்த 3 ஆண் பயணிகள் மீது சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஆகவே அவர்களை பரிசோதனை செய்ததில் 1.21 கோடி ரூபாய் மதிப்பிலான 2 கிலோ 304கிராம் தங்கத்தை அவர்கள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.


அதேபோல ஹைதராபாத்தில் இருந்து வந்த ஒரு ஆண் பயணி 37 லட்ச ரூபாய் மதிப்பிலான 702 கிராம் தங்கத்தையும், துபாயில் இருந்து வந்த ஒரு பெண் பயணி 44.96 லட்சம் மதிப்பிலான 852 கிராம் தங்கத்தையும் மறைத்து வைத்திருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். ஒட்டுமொத்தமாக ரூபாய் 2.03 கோடி ரூபாய் மதிப்பிலான 3 கிலோ 804 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

Next Post

உணவுப் பொருட்களை இனி அதிக விலைக்கு விற்க முடியாது..!! ஐ.ஆர்.சி.டி.சி. அதிரடி நடவடிக்கை..!!

Wed May 10 , 2023
இந்தியாவில் பெரும்பாலான பயணிகள் ரயிலில் பயணம் செய்வதை விரும்புகின்றனர். தற்போது கோடை விடுமுறை தொடங்கி விட்டதால், வழக்கத்தை விட ரயில்களில் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. இந்நிலையில், ரயில்களில் உணவுப்பொருட்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக தற்போது பயணிகள் மத்தியில் புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய போது, ரூ.100 மேல் உணவுப் பொருட்கள் விற்பனை செய்வது தெரிய வந்துள்ளது. இதன் காரணமாகவே அதிக விலையில் உணவுப் பொருட்களை […]
WhatsApp Image 2022 09 28 at 10.23.10 AM

You May Like