இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து நேற்று விமானம் சென்னைக்கு வந்தது. அப்போது அந்த விமானத்தில் இருந்த 3 ஆண் பயணிகள் மீது சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஆகவே அவர்களை பரிசோதனை செய்ததில் 1.21 கோடி ரூபாய் மதிப்பிலான 2 கிலோ 304கிராம் தங்கத்தை அவர்கள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதேபோல ஹைதராபாத்தில் இருந்து வந்த ஒரு ஆண் பயணி 37 லட்ச ரூபாய் மதிப்பிலான 702 கிராம் தங்கத்தையும், துபாயில் இருந்து வந்த ஒரு பெண் பயணி 44.96 லட்சம் மதிப்பிலான 852 கிராம் தங்கத்தையும் மறைத்து வைத்திருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். ஒட்டுமொத்தமாக ரூபாய் 2.03 கோடி ரூபாய் மதிப்பிலான 3 கிலோ 804 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்துள்ளனர்.