#TnGovt: அரசு பணி பதவி உயர்வில் இவர்களுக்கு எல்லாம் 4% இட ஒதுக்கீடு…! குழு அமைத்து தமிழக அரசு அதிரடி…!

அரசு பணியில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு பதவி உயர்வில் 4% இட ஒதுக்கீடு வழங்க துணைக்குழு அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அரசு பணியிலுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு பதவி உயர்வில்‌ 4% இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து மத்திய அரசால்‌ வழிகாட்டு நெறிமுறைகள்‌’ வெளியிடப்பட்டுள்ளன. சென்னை உயர்நீதிமன்றம்‌ மற்றும்‌ மதுரை உயர்நீதிமன்ற கிளையில்‌ அரசுப்‌ பணி பதவி உயர்வுகளில்‌ மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இடஒதுக்கீடு வழங்கக்‌ கோரி வழக்குகள்‌ தொடரப்பட்டுள்ளது.

கீழ்க்கண்ட அலுவலர்களைக்‌ கொண்டு துணைக்குழுவினை அமைக்கலாம்‌ எனவும்‌, இக்குழு மேலும்‌, பதவி உயர்வில்‌ 4% இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து மாநில வரைவு கொள்கையினை இக்குழு அமைக்கப்பட்ட நான்‌ முதல்‌ ஒரு மாத காலத்திற்குள்‌ உயர்மட்டக்‌ குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டுமெனவும்‌ அதற்குரிய ஆணையினை வழங்குமாறு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

பெரும் சோகம்...!சரோஜா பாலசுப்ரமணியன் காலமானார்...! முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்...!

Mon Nov 7 , 2022
சரோஜா பாலசுப்ரமணியன் மறைவிற்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியை தெரிவித்துள்ளார். ஆனந்த விகடன் குழுமத்தின் தலைவரான காலம் சென்ற எஸ்.பாலசுப்ரமணியன் அவர்களின் மனைவியும், ஆனந்த விகடன் குழுமத்தின் மேலாண் இயக்குநர் பா.சீனிவாசன் அவர்களின் தாயாருமான சரோஜா பாலசுப்ரமணியன் காலமானார். இவருக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் செய்தியை தெரிவித்து வருகின்றனர். தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள தனது இரங்கல் செய்தியில்; விகடன் குழுமத்தின் மேலாண் இயக்குநர் திரு.சீனிவாசன் அவர்களின் […]

You May Like