அரசு பணியில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு பதவி உயர்வில் 4% இட ஒதுக்கீடு வழங்க துணைக்குழு அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அரசு பணியிலுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு பதவி உயர்வில் 4% இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து மத்திய அரசால் வழிகாட்டு நெறிமுறைகள்’ வெளியிடப்பட்டுள்ளன. சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் அரசுப் பணி பதவி உயர்வுகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இடஒதுக்கீடு வழங்கக் கோரி வழக்குகள் தொடரப்பட்டுள்ளது.
கீழ்க்கண்ட அலுவலர்களைக் கொண்டு துணைக்குழுவினை அமைக்கலாம் எனவும், இக்குழு மேலும், பதவி உயர்வில் 4% இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து மாநில வரைவு கொள்கையினை இக்குழு அமைக்கப்பட்ட நான் முதல் ஒரு மாத காலத்திற்குள் உயர்மட்டக் குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டுமெனவும் அதற்குரிய ஆணையினை வழங்குமாறு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.