தமிழகத்தில் கடந்த மாதம் மட்டும் ரூ.8,774 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வசூல்…! மத்திய நிதி அமைச்சகம் தகவல்…!

தமிழகத்தில் 2023 பிப்ரவரியில் ஜிஎஸ்டி வசூல் 19% உயர்ந்து ரூ.8,774 கோடியாக உள்ளது.

2023 பிப்ரவரி மாதத்தின் ஜிஎஸ்டி வருவாய் கடந்த ஆண்டு இதே மாதத்தின் ரூ 1,33,026 கோடி என்பதைவிட 12% அதிகமாகும் ஜிஎஸ்டி அமலாக்கப்பட்டதிலிருந்து இம்மாதம் அதிகபட்சமாக செஸ்வரி வசூல் ரூ.11,931 கோடியாக உள்ளது.


பொதுவாக, பிப்ரவரி மாதத்தில் 28 நாட்கள் மட்டுமே இருக்கும் என்பதால் ஒப்பீட்டு அளவில் வருவாய் வசூல் குறைவாக இருக்கும். தமிழகத்தில் 2022 பிப்ரவரி மாதத்தில் ரூ.7,393 கோடியாக இருந்த ஜிஎஸ்டி வரி வசூல் 2023 பிப்ரவரியில் 19% உயர்ந்து ரூ.8,774 கோடியாக உள்ளது.

ஒருங்கிணைக்கப்பட்ட ஜிஎஸ்டி யிலிருந்து ரூ.34,770 கோடி சிஜிஎஸ்டி க்கும் ரூ.29,054 கோடி எஸ்ஜிஎஸ்டி க்கும் அரசால் பகிர்ந்தளிக்கப்பட்டது. வழக்கமான பகிர்வுக்குபின் 2023 பிப்ரவரி மாதத்தில் சிஜிஎஸ்டி மூலம் மத்திய அரசின் மொத்த வருவாய் ரூ‌.62,432 கோடியாகவும் எஸ்ஜிஎஸ்டி மூலம் மாநில அரசின் மொத்த வருவாய் ரூ.63,969 கோடியாகவும் உள்ளது மேலும் 2022 ஜூன் மாதத்திற்கு நிலுவையாக உள்ள ஜிஎஸ்டி இழப்பீடாக ரூ.16,982 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது.

Vignesh

Next Post

மீண்டும் ஆட்சி அமைக்கிறது பாஜக..? எங்கு தெரியுமா..? வெளியான வாக்கு எண்ணிக்கை நிலவரம்..!!

Thu Mar 2 , 2023
மேகாலயா, திரிபுரா, நாகாலாந்து ஆகிய 3 மாநில சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. திரிபுராவில் உள்ள 60 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த 16ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. அங்கு 90% வாக்குகள் பதிவாகின. அதே போல மேகாலயா, நாகாலாந்து மாநில சட்டசபைகளுக்கும் ஒரே கட்டமாக 27ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், மேகாலயாவில் 85%, நாகாலாந்தில் 84% வாக்குகள் பதிவாகின. இந்நிலையில் திரிபுராவில் […]
counting votes16 1619921056 1634090785

You May Like