நாம் அழுவதால் சில நன்மைகள் இருக்கின்றன என்று சொன்னால் நம்ப முடிகிறதா? இங்கே அதனை பற்றி காணலாம்.
அழும்போது, கண்களில் உள்ள ஹைட்ரேட் செய்யப்பட்டு பார்வையை மேம்படுத்தவும் மற்றும் கவனத்தை அதிகரிக்கவும் உதவுகிறது. தினசரி வாழ்க்கையில் நிறைய அழுக்கு மற்றும் தூசி கண்களில் படிகிறது. மேலும் இவை கண்களுக்கு தீங்கு விளைவித்து பார்வையை மோசமாக்குகிறது.
கண்ணீர் குழாய்கள் மூக்கின் உட்புற பகுதியில் இணைக்கப்பட்டுள்ளது. அதனால் தான் அழும்போது மூக்கிலிருந்து நீர் வடிகிறது. இதன் மூலமாகவும் நாம் பயனடைகிறோம். மூக்கிலிருந்து எரிச்சல் மற்றும் பாக்டீரியாக்களை வெளியேற்றுகிறது.இரவில் குழந்தைகள் நன்றாக உறங்குவதற்கு அழுகை உதவுகிறது.
அழுகை தூக்கத்தின் நீளத்தை அதிகரிக்கிறது மற்றும் உண்மையில், இரவில் எழுந்திருக்கும் நேர அளவின் எண்ணிக்கையை குறைக்கிறது என்று கண்டறியப்பட்டது. ஒரு வருடம் கழித்தும் , அழுகையானது குழந்தைகளின் மன அழுத்தத்தையும் பாதிக்காது. சிலர் பயம், மன அழுத்தம் மற்றும் மகிழ்ச்சியாக இருக்கும்போது கூட அழுவார்கள்.
இவ்வாறு பல உணர்ச்சிகளில் அழுவது நமது உணர்ச்சியை சமநிலையாக வைத்து கொள்ள உதவுகிறது ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். நாம் மிகவும் பயந்து அல்லது மகிழ்ச்சியாக இருந்து அழும்போது, உடல் வலுவான உணர்ச்சியிலிருந்து மீள்வதற்கு இது ஒரு வழியாகும்.மன அழுத்த ஹார்மோன்கள் மற்றும் பிற நச்சுகள் இருப்பதாகவும் அந்த அழுகை இப்படி சில விஷயங்களை உடலில் இருந்து வெளியேற்றி வருகிறது என்றும் ஆய்வு கூறப்படுகிறது.