எவ்வளவு தான் தற்போது குளிர்காலமாக இருந்தாலும் தயிர் பிரியர்கள் தயிரை உண்பதனை விட மறுக்கிறார்கள். தமிழர்களின் பாரம்பரிய உணவே தயிர் தான். முக்கியமாக முதல் நாள் தயிரை மட்டுமே உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பழைய தயிரை தவிர்க்க வேண்டியது மிகவும் அவசிமான ஒன்று.
இருப்பினும் குளிர்காலத்தில் மற்றும் மழைக்காலத்தில் தயிரை இவ்வாறு உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் பாதிப்படையாமல் காத்து கொள்ளலாம். மழைக்காலத்தில் தயிரை எடுத்து கொள்ளும் போது அதில் மிளகுத் தூள் மற்றும் சீரகம் போன்றவற்றை சேர்த்துக் கொள்ளலாம்.
தயிரில் நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் தான் அதிகமாக காணப்படுகிறது. இருப்பினும் ஒரு சிலர் தயிரை தவிர்ப்பது நல்லது என்று கூறுகிறது ஆயுர்வேதம். காரணம் ஆஸ்துமா , சைனஸ் பிரச்சினை உள்ளவர்கள் தயிரை தவிர்ப்பது நல்லது என்கின்றனர்.