fbpx

சளி இருமல் பாடாய்படுத்துதா? இந்த இஞ்சி கஷாயம் குடிச்சு பாருங்க!

காலநிலை மாறி மாறி வரும்போது நமக்கு சளி இருமல் போன்ற உடல் உபாதைகள் ஏற்படும். இதற்கு மருத்துவமனையை நாடாமல்  நாம் வீட்டிலேயே தயாரிக்கும்  இஞ்சி கசாயத்தின் மூலம்  குணப்படுத்தலாம். இந்த கசாயத்தை எவ்வாறு செய்யலாம் என்று பார்ப்போம்.

தேவையான பொருள்கள்:
இஞ்சி  – 2 துண்டு
மிளகு  – 1/2  டீஸ்பூன்
மல்லி விதை – 1 டீஸ்பூன்
சீரகம் – 1/2  டீஸ்பூன்
பனங்கற்கண்டு – தேவையான அளவு
துளசி இலை  –  10
ஓம இலை / கற்பூரவள்ளி இலை – 2
தண்ணீர் – 1 1/2  கப்

செய்முறை:
இஞ்சியை தோல் நீக்கி நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும். மிளகு மல்லி விதை சீரகம் துளசி இலை ஓம இலை ஆகியவற்றை  இஞ்சியுடன் சேர்த்து நன்றாக இடித்துக் கொள்ளவும்.

அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில் ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி  நாம் இடித்து வைத்த விழுதை போட்டு ஒன்றரை கப் தண்ணீர் பாதியாக வற்றியதும்  அடுப்பை அணைத்துவிட்டு ஒரு பாத்திரத்தில் இந்த கலவையை வடிகட்டிக் கொள்ளலாம்.

பின்னர் அதனுடன் தேவையான அளவு பனங்கற்கண்டு சேர்த்து  வெதுவெதுப்பான சூட்டில் குடித்து வர காய்ச்சல் இருமல் மற்றும் வாயு தொல்லை போன்றவை நீங்கும்.

Baskar

Next Post

193 பயணிகள் மற்றும் 6 பணியாளர்களுடன் அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்...!

Mon Jan 30 , 2023
ஷார்ஜாவில் இருந்து இந்தியா வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் கோளாறு காரணமாக கொச்சி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. ஷார்ஜாவில் இருந்து இந்தியா வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் ஹைட்ராலிக் செயலிழந்ததாக கூறியதை அடுத்து கேரளாவில் உள்ள கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இரவு 8.04 மணிக்கு விமான நிலையத்தில் முழு அவசர நிலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது, இரவு 8.26 மணிக்கு விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது […]

You May Like