fbpx

இந்த அறிகுறிகள் இருந்தால் உடனடியாக இதய மருத்துவரை சந்தியுங்கள் !

மாரடைப்பு என்பது இப்போது மிகவும் சர்வ சாதாரணமாக அனைத்து வயதினரையும் தாக்குகின்றன! அது சிலரின் கடைசி நிமிடங்களாக கூட அமைந்து விடுகிறது. அது போன்ற நிலையிலீர்னுந்து நாம் நம்மை தற்காத்து கொள்ள சில அறிகுறிகள் நம்முள் தென்பட்டால் உடனே அருகிலிருக்கும் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.

மாரடைப்பின் முதல் அறிகுறி இடது கை தோள்பட்டையிலிருந்து மார்பு பகுதி வரை நாம் உணரக்கூடிய வலியாகும். மேலும் இந்த வலியை நம் தாடைகளிலும் முதுகின் நடுப்பகுதியிலும் உணர முடியும்.

பெரும்பாலும் மாரடைப்புகள் சில நிமிடங்களுக்கு மேல் நீடிக்கும். மார்பின் மையத்தில் ஒரு அசௌகரியத்தை உண்டாக்கி அந்த வலியானது விட்டு விட்டு வரும். மேலும் இது மார்பு பகுதியில் ஒரு விதமான அழுத்தத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும்.

மூச்சு விடுவதில் சிரமம் மாரடைப்பின் ஒரு முக்கியமான அறிகுறி ஆகும். இது மார்பு வலி இல்லாமலும் மேலும் மார்புப் பகுதியில் எந்தவித அசௌகரியமும் இல்லாமல் கூட இது ஏற்படக்கூடும் .

மேலும் இவை தவிர வியர்வை குமட்டல் லேசான தலைவலி ஆகியவையும் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான அறிகுறிகள் ஆகும். மாரடைப்பு சிலருக்கு எந்தவித அறிகுறிகள் இல்லாமல் கூட ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதனால் அடிக்கடி மருத்துவ பரிசோதனைகளை செய்து கொண்டு நம் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்து, முறையான உடற்பயிற்சி தூக்கம் ஆகியவற்றை பேணுவதன் மூலம் இது போன்ற நோய்களிலிருந்து நம்மை காத்துக் கொள்ளலாம்.

Baskar

Next Post

சளி இருமல் பாடாய்படுத்துதா? இந்த இஞ்சி கஷாயம் குடிச்சு பாருங்க!

Mon Jan 30 , 2023
காலநிலை மாறி மாறி வரும்போது நமக்கு சளி இருமல் போன்ற உடல் உபாதைகள் ஏற்படும். இதற்கு மருத்துவமனையை நாடாமல்  நாம் வீட்டிலேயே தயாரிக்கும்  இஞ்சி கசாயத்தின் மூலம்  குணப்படுத்தலாம். இந்த கசாயத்தை எவ்வாறு செய்யலாம் என்று பார்ப்போம். தேவையான பொருள்கள்:இஞ்சி  – 2 துண்டுமிளகு  – 1/2  டீஸ்பூன்மல்லி விதை – 1 டீஸ்பூன்சீரகம் – 1/2  டீஸ்பூன்பனங்கற்கண்டு – தேவையான அளவுதுளசி இலை  –  10ஓம இலை / கற்பூரவள்ளி இலை – 2தண்ணீர் – 1 1/2  கப் […]

You May Like