பெரும்பாலானோர் மூட்டு வலியால் அவதிப்பட்டு வருகின்றனர். அதிலும் 30-50 உள்ளவர்களே சொல்வதை நாம் கேட்டிருப்போம். ஆனால் இதற்கான காரணம் முறையற்ற உணவு பழக்கங்கள் தான். பழங்காலத்தில் களி, கேழ்வரகுக் களி மற்றும் சிறு தானியங்கள் போன்ற சத்தான உணவு பழக்க வழக்கங்களை கடைப்பிடித்து வந்தனர் நம் முன்னோர்கள்.
அதனால் அவர்கள் அதிக நாட்கள் ஆரோக்கியத்துடன் வாழ்ந்து வந்தனர். தற்போது சூழ்நிலையில் பல பாஸ்ட் புட் என உணவு முறைகளே நம்மில் ஏராளமாக பரவி இருக்கின்றன. மூட்டுவலிக்கான முக்கிய காரணம் உடலில் தேவையற்ற கொழுப்புகளின் அளவு அதிகரிப்பது தான்.
கொழுப்புகளின் அதிகரிப்பால் தான் உடலை சுமந்து நடக்கும் போது மூட்டுகளில் வலி ஏற்படுகிறது. இதனை தவிர்க்க கடைகளில் இருக்கும் குளிர்பானங்கள், எண்ணெயில் செய்த பலகாரங்கள் , சிப்ஸ் வகைகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட அசைவ உணவு ஆகியவற்றை தவிர்த்து கொள்ள வேண்டும்.
அதற்கு பதிலாக கீரை வகைகள், பச்சை காய்கறிகள் மற்றும் தானிய வகைகள் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்தால் போதும் தொப்பையிலிருந்து மட்டும் இல்லாமல், மூட்டு வலியில் இருந்தும் பேணி காத்து கொள்ள முடியும்.