நாம் சாப்பிட்ட பிறகு, நம் உடலில் கழிவுகள் சேர்ந்தால், அது ஒரு நோயாக மாறும். இதைத் தவிர்க்க, கழிவுகளை வெளியேற்ற சில வீட்டு வைத்தியங்களைப் பார்ப்போம். இஞ்சியை அரைத்து இஞ்சி டீ குடித்து வந்தால், நம் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும்.
முழு நெல்லிக்காயையும் சிறு துண்டு இஞ்சி மற்றும் கறிவேப்பிலையுடன் சேர்த்து அரைத்து எலுமிச்சை சாறு பிழிந்து வடிகட்டி பானமாக தயாரிக்கலாம். மேலும் சில குறிப்புகளையும் பார்க்கலாம்.
காலையில் எழுந்தவுடன், ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் ஒரு அரை எலுமிச்சை சாறு கலந்து குடித்து வந்தால், உடலில் உள்ள கழிவுகள் வெளியேறி, உடலை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும்.
இஞ்சியின் தோலை நீக்கி அதன் சாறு எடுத்து தேனுடன் தினமும் 2-3 வேளை குடித்து வந்தால் குடல்கள் சுத்தமாவதை நீங்கள் அறியலாம்.
கற்றாழை ஒரு நச்சு நீக்கி மற்றும் மலமிளக்கியாகும். இதன் இலைகளின் சதைப்பகுதி மற்றும் எலுமிச்சை சாறு மட்டும் குடித்தாலும் கழிவுகள் வெளியேறும்.