நெல்லிக்காய் என்றாலே பிடிக்காதவர்கள் எவரும் இலர். அதனிலும் சிறிது உப்பு மற்றும் மிளகுத்தூள் தூவி உண்பவர்கள் தான் அதிகம். ஆனால் அதனை ருசிக்காக உண்கிறோமே தவிர அதன் பயனை நாம் அறிந்து கொள்வது இல்லை.
நெல்லிக்காயில் பலமருத்துவ குணங்கள் உள்ளன. இதில் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து போன்ற உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துக்கள் இதில் இருப்பதால் பெண்கள் இதனை தொடர்ந்து உண்டு வர வேண்டும்.
நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வருவது மிகவும் நல்லது. ஏனெனில் இதில் வைட்டமின் சத்துகள் நிறைந்துள்ளதால், அது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இதனை தொடர்ந்து குளிர்காலத்தில் அடிக்கடி வரும் சளி மற்றும் இருமலிலிருந்து பாதுகாத்து கொள்ளவும் உதவுகிறது.
நெல்லிக்காய் ஜூஸ் அருந்துவதால் எடையைக் கட்டுப்படுத்தி எடை இழப்புக்கு பெரிதும் உதவுகின்றது. உடல் பருமனுக்கு மிக முக்கிய காரணியாக இருப்பது உடலின் மெதுவான வளர்சிதை மாற்றம் தான். நெல்லிக்காய் சாறு உண்ணும் போது அது உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க பயன்படுகிறது.
மேலும் முகத்தில் உள்ள இயற்கையான பொலிவைப் பெற உதவுகிறது. இதில் நிறைந்துள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மனிதனின் வயதான தோற்றத்தை குறைத்து இளமையாக தோற்ற மளிக்கும் தன்மை கொண்டது. அத்துடன் சுருக்கங்கள் மற்றும் மெல்லிய கோடுகள் போன்ற வற்றையும் குறைக்கிறது.